விடை பெற்ற டீன் எல்கருக்கு.. கிங் கோலி, ஹிட்மேன் ரோஹித் கொடுத்த அன்பு பரிசு

Dean Elgar Retirement 2
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அதனால் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு எதிராக தோற்காமல் இருந்து வரும் மாபெரும் கௌரவத்தை தக்க வைத்துக் கொண்ட அந்த அணி ஒய்ட் வாஷ் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கேப் டவுன் நகரில் நடைபெற்ற 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா வெறும் 55 ரன்களுக்கு சுருண்டு வெற்றியை கோட்டை விட்டது. ஏனெனில் அதன் பின் இந்தியாவை 153 ரன்களுக்கு கட்டுப்படுத்திய அந்த அணி 2வது இன்னிங்சில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வெறும் 79 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

- Advertisement -

விடை பெற்ற எல்கர்:
அதை எளிதாக சேசிங் செய்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தென்னாப்பிரிக்காவில் 13 வருடங்கள் கழித்து 1 – 1 என்ற கணக்கில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்து கோப்பையை பகிர்ந்து கொண்டது. முன்னதாக இத்தொடரில் ஓய்வு பெறுவதாக அறிவித்த டீன் எல்கர் முதல் போட்டியில் 185 ரன்கள் விளாசி இந்தியாவை தோற்கடித்து ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.

மேலும் 2வது போட்டியில் தெம்பா பவுமா காயமடைந்து வெளியேறியதால் தம்முடைய கடைசி போட்டியில் நாட்டை கேப்டனாக வழி நடத்தும் பொன்னான வாய்ப்பை பெற்ற அவர் முடிந்தளவுக்கு போராடியும் வெற்றி காண முடியவில்லை. ஆனால் புஜாராவை போல சற்று மெதுவாக விளையாடுவதை வழக்கமாக வைத்திருப்பதால் கிரிக்கெட்டில் வாய்ப்பை இழந்து முழுக்க முழுக்க டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக தம்முடைய கேரியரை அர்ப்பணித்த அவர் 5000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன் கேப்டனாக 2021/22இல் விராட் கோலி தலைமையிலான இந்தியாவை 2 – 1 என்ற கணக்கில் தோற்கடித்து அவர் தென்னாப்பிரிக்காவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அந்த வகையில் நவீன கிரிக்கெட்டின் சிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவராக அசத்தி விடை பெற்ற அவருக்கு போட்டியின் முடிவில் இந்தியாவின் விராட் கோலி தம்முடைய கையொப்பமிட்ட ஜெர்சியை நேராக சென்று கட்டியணைத்து பரிசாக வழங்கினார்.

இதையும் படிங்க: 30 வருடங்கள்.. பாகிஸ்தான் போன்ற ஆசிய அணிகள் செய்யாத.. மாஸ் சாதனை படைத்த இந்தியா

சொல்லப்போனால் 2வது இன்னிங்ஸில் அவுட்டாகி செல்லும் போது ரசிகர்களை எழுந்து நின்று கைதட்டி அவருக்கு தலைவணங்குமாறு கேட்டுக்கொண்ட விராட் கோலி தற்போது ஜெர்சியை பரிசளித்து தன்னை மனதளவிலும் கிங் என்பதை நிரூபித்துள்ளார். அதே போல ஒட்டுமொத்த வீரர்களின் கையொப்பமிட்ட இந்திய அணியின் ஜெர்சியை அன்பு பரிசாக கேப்டன் ரோஹித் சர்மா கோப்பையை பகிர்ந்து கொள்வதற்கு முன்பாக டீன் எல்கருக்கு பரிசளித்தார். அந்த வகையில் 2 இந்திய ஜாம்பவான் வீரர்கள் தென்னாபிரிக்க கேப்டனுக்கு நெஞ்சை தொடும் பரிசை கொடுத்து வழி அனுப்பியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement