சி.எஸ்.கே கொல்கத்தா மேட்ச்சுக்கு என் குடும்பமே வந்தாங்க.. ஆனா அங்க நடந்ததே வேற – வருண் சக்ரவர்த்தி சுவாரசிய தகவல்

Varun
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இரண்டாவது வாரத்தை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான 22-வது லீக் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.

அதன்படி நேற்று நடைபெற்ற முடிந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணி சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே குவித்தது. அந்த அணி சார்பாக ஷ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 34 ரன்களை குவித்தார்.

- Advertisement -

பின்னர் 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சிஎஸ்கே அணியானது 17.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 141 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது கொல்கத்தா அணி சார்பாக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களை வீசி 26 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தாலும் விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் இருந்தார்.

இந்நிலையில் போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்தும் மேலும் சில விடயங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்ட வருண் சக்கரவர்த்தி கூறுகையில் : சென்னை அணி இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டது. நாங்கள் ஆடுகளத்தை சரியாக மதிப்பீடு செய்யவில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்தது.

- Advertisement -

குறிப்பாக முதல் பாதியில் ரன்கள் அடிப்பது கடினமாக இருந்தது. எனவே 160 ரன்கள் வரை இருந்தால் அது சவாலான இலக்காக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் எங்களால் அந்த அளவிற்கு ரன்களை குவிக்க முடியவில்லை. அதேபோன்று மைதானத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் பந்தை கிரிப் செய்தும் வீச முடியவில்லை என வருண் சக்கரவர்த்தி கூறியிருந்தார்.

இதையும் படிங்க : ரசல் தடுமாறிய பிட்ச்சில் மிரட்டிய துபேவை 2024 டி20 உலகக் கோப்பையில் செலக்ட் பண்ணுங்க.. முன்னாள் வீரர்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்த போட்டியை காண எனது குடும்பத்தில் இருந்த அனைவருமே நேரில் வந்திருந்தார்கள். அவர்களெல்லாம் எனது ஆட்டத்தை ரசிக்க வருவார்கள் என்று நினைத்தேன். ஆனால் எனது குடும்பத்தினர் அனைவருமே மஞ்சள் ஜெர்சியை அணிந்து வந்து சிஎஸ்கே அணிக்கு சப்போர்ட் செய்தனர் என்று சுவாரஸ்ய தகவலை வருண் சக்கரவர்த்தி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement