ஐபிஎல் ரத்தானதை பார்த்து சிரித்த பாகிஸ்தான் ரசிகர்கள்.. பெரிய ஆப்பை அடித்த அமீரகம்.. வெளியான தகவல்

IND vs PAK UAE
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இருப்பினும் தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதனால் தற்காலிகமாக ஐபிஎல் தொடர் காலவரையின்றி நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இருப்பினும் ஒரு வாரம் கழித்து நிலைமைகளை ஆராய்ந்து மீண்டும் ஐபிஎல் தொடரை இந்தியாவிலேயே நடத்துவோம் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

அதைப் பார்த்த பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சிரித்து இந்தியாவை கலாய்த்தனர். அதற்கு 2 காரணங்கள் இருக்கின்றன. முதலில் மிகப்பெரிய ராணுவத்தை வைத்துள்ளோம் என்று மார்த் தட்டும் இந்தியாவால் ஐபிஎல் தொடரை முழுமையாக நடத்தி முடிக்கவில்லையா? என்று பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர்கள் கிண்டலடித்தனர். மற்றொன்று ஐபிஎல் போலவே பாகிஸ்தானிலும் தற்போது 2025 பிஎஸ்எல் தொடர் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

சிரித்த பாகிஸ்தான்:

இருப்பினும் அந்தத் தொடரை ஐபிஎல் போல பாகிஸ்தான் வாரியம் ரத்து செய்யவில்லை. மாறாக ஐக்கிய அரபு நாடுகளில் 2025 பிஎஸ்எல் போட்டிகளை நடத்துவோம் என்று அறிவித்தது. அப்படி பதற்றத்தையும் தாண்டி இந்தியாவை போல் பின்வாங்காமல் பாகிஸ்தான் பிஎஸ்எல் தொடரை வெற்றிகரமாக நடத்துவதாக அந்நாட்டு ரசிகர்கள் கிண்டல் செய்தனர்.

இந்நிலையில் பிஎஸ்எல் தொடரை தங்களுடைய நாட்டில் நடத்த முடியாது என்று ஐக்கிய அரபு நாடுகளின் வாரியம் அறிவித்துள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதாக அமீரக வாரியம் கூறியுள்ளது. மேலும் லாக் டவுன் சமயத்தில் 2021 டி20 உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை இந்தியா தங்களுக்கு வழங்கியதாக அமீரகம் கூறியுள்ளது.

- Advertisement -

அமீரகம் ஆப்பு:

எனவே பாகிஸ்தானுக்கு ஆதரவளித்து இந்தியாவின் நட்பை உடைத்துக்கொள்ள விரும்பவில்லை என்றும் அமீரக வாரியம் அறிவித்துள்ளது. இது பற்றி பிடிஐ இணையத்தில் அந்நாட்டு வாரியத்தின் நிர்வாகி பேசியது பின்வருமாறு. “தற்சமயத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு சம்பந்தமாக பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அது போன்ற சூழ்நிலையில் பாகிஸ்தானின் நண்பனாக இருப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: ஒரே போட்டியில் சி.எஸ்.கே அணிக்காக ஆடியிருந்தாலும் உர்வில் பட்டேல் நிகழ்த்தியுள்ள வரலாற்று சாதனை – விவரம் இதோ

“அமீரக வாரியம் பிசிசிஐயுடன் சமீப காலங்களில் மிகவும் வலுவான உறவைக் கொண்டுள்ளது. இந்தியாவில் நடக்க வேண்டிய 2021 ஐசிசி டி20 உலகக் கோப்பையை நடத்தியது. 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியாவின் போட்டிகள் துபாயில் நடைபெற்றன. இங்கே கிரிக்கெட்டை ரசிக்கும் பலதரப்பட்ட தெற்காசிய மக்கள் இருக்கின்றனர். இந்த பதட்டமான சூழ்நிலையில் பிஎஸ்எல் போட்டிகளை நடத்துவது நல்லிணக்கத்தை சீர்குலைத்து பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தி சமூகங்களுக்கிடையே தேவையற்ற உரசல்களை உருவாக்கலாம்” என்று கூறினார்.

Advertisement