CSK : வித்தியாசமான முறையில் நிச்சயதார்த்தை முடித்த துஷார் தேஷ்பாண்டே – அவரது வருங்கால மனைவி யார் தெரியுமா?

NabhaGaddamwar
- Advertisement -

இந்த 2023-ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்தே இந்திய அணியின் பல்வேறு வீரர்கள் தொடர்ச்சியாக தங்களது திருமணங்களை நடத்தி வரும் வேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து தற்போது மற்றொரு சிஎஸ்கே வீரரான வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே தனது திருமணத்திற்கான நிச்சயதார்த்தத்தை செய்து முடித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வெல்ல இவரும் ஒரு காரணம் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் வேகப்பந்து வீச்சாளரான அவர் சி.எஸ்.கே அணிக்காக இந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

- Advertisement -

இந்த தொடரின் ஆரம்பத்தில் சற்று அவர் சொதப்பி இருந்தாலும் அதன் பின்னர் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் துஷார் தேஷ்பாண்டேவிற்கு நேற்று மும்பையில் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது.

அதிலும் வித்தியாசமாக தனது நிச்சயதார்த்த மோதிரத்தை கிரிக்கெட் பந்தின் மீது வைத்த பின்னர் அந்த மோதிரத்தை இருவரும் மாற்றிக் கொண்டனர். இந்நிலையில் அவரது வருங்கால மனைவி யார்? என்பது குறித்த சில தகவல்களும் கிடைத்துள்ளது.

- Advertisement -

அதன்படி அவர் திருமணம் செய்து கொள்ள இருக்கும் மணப்பெண்ணின் பெயர் : நபா கடம்வார். சிறு வயது முதலே இருவரும் பள்ளி பருவத்தில் இருந்து ஒன்றாக படித்து வந்ததாகவும் தனது நீண்ட கால காதலியை அவர் கரம் பிடிக்க உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : இந்த ஃபீல்டிங் கூடவா தெரியாது? வெற்றியை பறித்த ஸ்மித் கேட்ச்சை விட்ட கோலி – புஜாராவை விளாசும் முன்னாள் வீரர்

மேலும் இதுகுறித்து துஷார் தேஷ்பாண்டே வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவிலும் : “பள்ளி காதலில் இருந்து வருங்கால மனைவி” என கேப்ஷன் போட்டுள்ளார். இவரது இந்த நிச்சயதார்த்தத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள வேளையில் சிவம் துபே நேரில் சென்று அவர்களை வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement