ரோஹித்தை பற்றி எனக்கு தெரியாதா.. டக் அவுட்டாக்கிய திட்டம் இது தான்.. ஆட்டநாயகன் ட்ரெண்ட் போல்ட் பேட்டி

Trent Boult
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெற்ற 14வது லீக் போட்டியில் மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது. அதனால் 3 போட்டிகளில் 3வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 125/9 ரன்கள் மட்டுமே எடுத்து வெற்றியை கோட்டை விட்டது.

அதிகபட்சமாக கேப்டன் பாண்டியா 34, திலக் வர்மா 32 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட், சஹால் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். பின்னர் 126 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு ரியான் பராக் 54* (39) ரன்கள் அடித்து 16.3 ஓவரிலேயே எளிதான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். அதனால் 3 போட்டிகளில் 3வது தோல்வியை பதிவு செய்த மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை வலுவாக பிடித்தது.

- Advertisement -

ஆட்டநாயகன் போல்ட்:
இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி ரோஹித் சர்மா, நமன் திர், தேவாலட் ப்ரேவிஸ் ஆகிய 3 பேட்ஸ்மேன்களை கோல்டன் டக் அவுட்டாக்கி ஆரம்பத்திலேயே மும்பையை மடக்கிய ட்ரெண்ட் போல்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். குறிப்பாக அவருடைய வேகத்தில் 0 ரன்களில் அவுட்டான ரோகித் சர்மா ஐபிஎல் வரலாற்றில் அதிக. முறை டக் அவுட்டான வீரர் என்ற பரிதாப சாதனையும் படைத்தார்.

இந்நிலையில் கடந்த பல வருடங்களாக ரோஹித் சர்மாவை அதிகமாக எதிர்கொண்டுள்ளதால் அவருடைய பலவீனத்தை பற்றி தெரிந்து வைத்துள்ளதாக ட்ரெண்ட் போல்ட் கூறியுள்ளார். எனவே அதற்கு தகுந்தார் போல் சிறிய மாற்றத்தை செய்து ரோகித்தை அவுட்டாக்கியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “புதிய பந்தில் விக்கெட்டுகளை எடுக்கும் என்னுடைய வேலையை பூர்த்தி செய்வது மகிழ்ச்சியை கொடுக்கிறது”

- Advertisement -

“டாஸ் வென்ற நாங்கள் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை எடுத்து பேட்ஸ்மேன்கள் மீது அழுத்தத்தை போடுவது பற்றி பேசினோம். ரோகித் சர்மாவுக்கு எதிராக நான் நிறைய விளையாடியுள்ளேன். எனவே நீங்கள் சற்று வித்தியாசமாக செயல்பட்டாலே அவருடைய விக்கெட்டை எடுக்கலாம். எப்போதும் இந்த வழியில் வேலை செய்யாது. ஆனால் அது இப்படி வேலை செய்யும் போது மகிழ்ச்சியாக இருக்கும்”

இதையும் படிங்க்: நேரலையில் சஞ்சய் மஞ்ரேக்கர் கெஞ்சிக் கேட்டும்.. பாண்டியாவுக்கு நேர்ந்த மெகா அவமானம்.. நடந்தது என்ன?

“நன்ரே பர்கர் ஒரு நல்ல வீரர். பல தென்னாப்பிரிக்க வீரர்களை போலவே அவரும் தன்னுடைய இதயத்தை மார்பில் வைத்து செயல்படுகிறார். சந்திப் சர்மா இப்போட்டியில் விளையாட விட்டாலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அஸ்வின் மற்றும் சஹால் ஆகியோரும் அசத்தினார்கள். அவர்களுடன் சேர்ந்து நானும் இந்த பந்து வீச்சு கூட்டணியில் ஒரு அங்கமாக இருப்பது நல்லது” என்று கூறினார்.

Advertisement