கிறிஸ் கெய்ல் மாதிரி அவரை சிஎஸ்கே வாங்குனது மாஸ்டர்ஸ்ட்ரோக்.. 10 வருடத்தில் சிறந்த முடிவு.. டாம் மூடி பாராட்டு

Tom Moody
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடியது. குறிப்பாக பேட்டிங் துறையில் அதிரடியாக விளையாடத் தடுமாறிய சிஎஸ்கே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது.

இருப்பினும் அதற்காக சோகத்தில் மூழ்காத அந்த அணி 2026இல் கம்பேக் கொடுப்பதற்கான வேலைகளை இப்போதே துவங்கியுள்ளது. அதன் முதல் படியாக ஆயுஸ் மாத்ரே, தேவால்ட் பிரேவிஸ், சாய்க் ரசித், உர்வில் படேல் போன்ற இளம் வீரர்களை வாங்கிய சிஎஸ்கே நிர்வாகம் அவர்களுக்கு களத்தில் விளையாடும் வாய்ப்பையும் கொடுத்துள்ளது. அந்த வாய்ப்பில் ஆயுஷ் மாத்ரே பெங்களூரு அணிக்கு எதிராக 94 ரன்கள் அடித்து தம்முடைய திறமையை நிரூபித்து வெற்றிக்குப் போராடினார்.

- Advertisement -

கிறிஸ் கெய்ல் போல:

அதை விட கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 60/5 என சிஎஸ்கே மீண்டும் தடுமாறியது. அப்போது களமிறங்கிய தேவால்ட் ப்ரேவிஸ் ஒரே ஓவரில் 30 ரன்கள் பறக்க விட்டு 52 (25) ரன்களை விளாசி வெற்றியில் பங்காற்றினார். அதே போட்டியில் ஆரம்பத்திலேயே அடித்து நொறுக்கிய உர்வில் படேல் 31 (11) ரன்கள் குவித்தது சிஎஸ்கே வெற்றிக்கு உதவியது. மொத்தத்தில் இந்த வருடம் தோற்றாலும் தரமான இளம் வீரர்கள் கிடைத்துள்ளது சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இந்நிலையில் தேவால்ட் ப்ரேவிஸை வாங்கியது கடந்த 10 வருடங்களில் சிஎஸ்கே அணி செய்த ஒப்பந்தங்களில் மிகவும் சிறந்தது என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மோடி பாராட்டியுள்ளார். இது பற்றி ஈஎஸ்பிஎன் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பிரேவிஸை மாற்று வீரராக வாங்கியுள்ளது கடந்த 10 வருடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்ததில் மிகச்சிறந்த ஒப்பந்தமாகும்”

- Advertisement -

தேவால்ட் ப்ரேவிஸ்:

“பெங்களூரு அணிக்காக மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்ட கிறிஸ் கெய்ல் ஐபிஎல் தொடரில் பெரிய ஆதிக்கம் செலுத்தினார். இதையும் அப்படி ஒரு ஒப்பந்தமாகவே நான் பார்க்கிறேன்” என்று கூறினார். அதாவது 2012ஆம் ஆண்டு டிர்க் நேனிஸ் காயத்தை சந்தித்ததால் பெங்களூரு அணிக்காக பாதியில் வாங்கப்பட்ட கெய்ல் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இதையும் படிங்க: ரசிகர்களே கவலைப்படாதீங்க.. ஐபிஎல் 2025 மீண்டும் துவங்கும்.. புதிய தேதிகள், அட்டவணை பற்றி பிசிசிஐ அறிவிப்பு

அதே போல தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ப்ரேவிஸ் சிஎஸ்கே அணிக்காக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று டாம் மூடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். உள்ளூரில் மிகச்சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்திய ப்ரேவிஸை ஏற்கனவே ரசிகர்கள் குட்டி ஏபி டீ வில்லியர்ஸ் என்று பாராட்டி வருகின்றனர். இது போக ப்ரேவிஸ் சிஎஸ்கே அணியின் சொத்தாக இருப்பார் என்று தோனியும் சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement