மும்பை ஜெர்ஸி போட்டதும் அவர் எப்டி அதிரடியா விளையாட போறாருனு பாருங்க – நட்சத்திர இந்திய வீரர் பற்றி டிகே கருத்து

Dinesh-Karthik-1
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற்ற இந்தியா அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்றது. குறிப்பாக வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற இத்தொடரில் கடைசி 2 போட்டிகளில் படுதோல்வியை சந்தித்த இந்தியா 2019க்குப்பின் 4 வருடங்களுக்கு கழித்து முதல் முறையாக சொந்த மண்ணில் ஒரு ஒருநாள் தொடரில் தோல்வியை சந்தித்து தங்களது நம்பர் ஒன் இடத்தையும் ஆஸ்திரேலியாவிடம் தாரை வார்த்தது.

- Advertisement -

முன்னதாக இத்தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் 3 போட்டிகளிலும் கோல்டன் டக் அவுட்டாகி மோசமான உலக சாதனை படைத்தது ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் அமைந்தது. ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் கடந்த 2 வருடங்களாக பெரும்பாலான போட்டிகளில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே சூழ்நிலை எப்படி இருந்தாலும் எதிரணி பவுலர்களை வெளுத்து வாங்கி பெரிய ரன்களை குவித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் குறுகிய காலத்திலேயே நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

மும்பை ஜெர்ஸியில்:
குறிப்பாக எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் கற்பனை செய்ய முடியாத புது புது ஷாட்டுகளால் அற்புதமாக பேட்டிங் செய்யும் அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று நிறைய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டி வருகிறார்கள். அப்படிப்பட்ட தரமான அவர் சற்று நிதானத்துடன் விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக செயல்பட்டு இதுவரை ஒருவரை சதம் கூட அடிக்காமல் 24.05 என்ற சுமாரான பேட்டிங் சராசரியில் விளையாடி வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

Suryakumar yadhav MI vs RCB.jpeg

அதிலும் சொந்த மண்ணில் நடைபெற்ற இத்தொடரில் ஒரு பந்தை கூட அடிக்காமல் காலத்திற்கும் அழிக்க முடியாத மோசமான உலக சாதனையை படைத்துள்ள சூரியகுமார் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு செட்டாக மாட்டார் என்று தெரிவிக்கும் ரசிகர்கள் சஞ்சு சாம்சன் போன்ற இதர வீரர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் துவங்கும் 2023 ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அபாரமாக செயல்பட்டு தன் மீதான சந்தேகத்தை சூரியகுமார் யாதவ் உடைப்பார் என்று தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அது ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் நடைபெற்றுள்ளது. குறிப்பாக சூரியகுமார் யாதவ் 3வது முறையாக கோல்டன் டக் அவுட்டான போது தொலைக்காட்சியில் அதை அஜித் அகர்கர் வர்ணனை செய்ததை நினைவில் கொள்ள வேண்டும். அஜித் அகர்கர் இதே போன்ற தருணத்தை தனது கேரியரில் சந்தித்ததை போல அனைத்து பேட்ஸ்மேன்களும் இந்த மோசமான தருணங்களை கடந்து வந்துள்ளார்கள்.இருப்பினும் தற்போது அனைவரும் சூரியகுமாருக்காக பரிதாபப்படுகிறார்கள். ஏனெனில் அவரிடம் அற்புதமான திறமை இருக்கிறது”

Dinesh-Karthik-1

“இருப்பினும் டி20 கிரிக்கெட் வித்தியாசமானது. அதில் அவர் மிருகத்தை போல் செயல்படக் கூடியவர். எனவே அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சியை அணியும் போது வித்தியாசமான வீரராக செயல்படுவார். குறிப்பாக இந்த வகையான கிரிக்கெட்டில் தான் நாம் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்காகவும் 2 வருடங்களாக அசத்தி வருகிறோம் என்பதை அவர் உணர்வார். அதே சமயம் 4வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் ஃபிட்டாக இல்லாத பட்சத்தில் அதை சரி செய்வதற்கு இந்திய அணி நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும்”

இதையும் படிங்க:ஐபிஎல் 2023 : என்னோட பெஸ்ட் இன்னும் வரல, ஆர்சிபி ரசிகர்களுக்கு விராட் கோலி கொடுத்த மெசேஜ் இதோ

“ஒருவேளை அவர் ஃபிட்டாக இருந்தால் அவர் தான் அந்த இடத்தில் விளையாடுவதற்கு தகுதியானவர். இல்லையேல் சூரியகுமார் யாதவ் தடுமாறும் நிலையில் வேறு எந்த வீரரை களமிறக்கலாம் என்பதை அவர்கள் யோசித்து முடிவெடுக்க வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டி20 கிரிக்கெட்டில் நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்த ஐபிஎல் தொடரில் சூரியகுமார் யாதவ் சிறப்பாக செயல்படுவார் என்று நம்பலாம்.

Advertisement