சச்சினுக்கு அடுத்து தோனிகிட்ட மட்டும் அந்த மேஜிக் இருக்கு.. மனதார புகழ்ந்த – சுரேஷ் ரெய்னா ஓபன்டாக்

Raina
- Advertisement -

42 வயதான சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடைசி சீசனாக இருக்கும் என்பதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதோடு சிஎஸ்கே அணி விளையாடப்போகும் போட்டிகளை காண ரசிகர்கள் லட்சக்கணக்கில் நேரில் படை எடுக்கவும் காத்திருக்கிறார்கள்.

அந்த அளவிற்கு தோனியின் மீது ரசிகர்கள் அன்பு வைத்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே அவர் ஓய்வு பெற்றிருந்தாலும் இன்றளவும் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடும் இந்திய வீரர்களை தாண்டியும் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

- Advertisement -

அப்படி ரசிகர்களின் ஈர்ப்பு இன்று வரை குறையாமல் இருப்பதற்கு காரணம் தோனியின் மிகச் சிறப்பான சாதனைகளும் அவரது ஆளுமையும் தான் என்றும் புகழப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னாவிடம் : எந்த வீரருக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா கூறுகையில் : நான் விளையாடும் போது சச்சின் டெண்டுல்கருக்கு அதிக அளவில் ரசிகர்கள் அன்பு கொடுப்பார்கள் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன். அதன்பிறகு இந்திய அணியில் எத்தனையோ வீரர்கள் விளையாடியிருந்தாலும் தோனிக்கு தான் அதே அளவு ரசிகர்களின் அன்பும் பாசமும் கிடைத்திருக்கிறது.

- Advertisement -

தோனி என்கிற பெயர் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் பதிந்து இருக்கிறது என ரெய்னா கூறினார். அதனை தொடர்ந்து பேசிய ஆர்.பி.சிங் கூறுகையில் : தோனிக்கு இருக்கும் ரசிகர்களை பற்றி என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஏனெனில் கடந்த ஆண்டு நான் பார்க்கும்போது தோனி எந்த அளவு ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

இதையும் படிங்க : அதை பாத்து வயிறு எரிஞ்ச இங்கிலாந்தை தோற்கடிச்சது மகிழ்ச்சியா இருக்கு.. சுனில் கவாஸ்கர் விமர்சனம்

அந்த அளவிற்கு லட்சக்கணக்கான கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தை தோனி கவர்ந்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாகவே தோனியின் மீது ஈர்ப்பு இன்னும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்வதை நான் பார்க்கிறேன் என ஆர்.பி.சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement