இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் 17-வது ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போதே மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு இறுதியில் வீரர்களுக்கான மெகா ஏலமானது நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்தில் நிர்வாகம் கொடுக்கும் விதிமுறையின் அடிப்படையில் வீரர்கள் தக்க வைக்கப்பட்டு பின்னர் ஏலமானது நடைபெற இருக்கிறது.
தோனி இன்னும் ஒரு வருஷம் ஆடனும் :
இந்த ஏலத்தில் பல்வேறு வீரர்கள் அணி மாற்றம் செய்ய இருப்பதினால் இந்த ஏலம் குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது. அதே வேளையில் தக்க வைக்கப்பட வேண்டிய வீரர்கள் குறித்த முடிவையும் அனைத்து அணிகளும் தற்போது எடுத்து வருகின்றன.
அந்த வகையில் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது உறுதியாகாத நிலையில் அவரை எப்படியாவது தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்புடன் சிஎஸ்கே அணி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தோனி நிச்சயம் அடுத்த ஆண்டு மேலும் ஒரு சீசன் சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்று சென்னை அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் : சி.எஸ்.கே அணியின் கேப்டனாக பொறுப்புக்கு வந்துள்ள ருதுராஜ் கெய்க்வாட் இன்னும் கேப்டன்சியில் முதிர்ச்சி அடைய தோனி ஒரு ஆண்டு சென்னை அணியில் விளையாட வேண்டும். ஆர்.சி.பி அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த கடைசி போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்த போது அவரது கேப்டன்சி குறித்த விமர்சனங்கள் இருந்தன. ஆனாலும் ருதுராஜ் அந்த சூழலை சிறப்பாக தான் கையாண்டு இருந்தார்.
இருந்தாலும் தோனி போன்ற ஒரு ஜாம்பவான் வீரர் இன்னும் ஒரு ஆண்டு அவருடன் பயணிக்கும் பட்சத்தில் நிச்சயம் ருதுராஜ்க்கு அது பல்வேறு மாற்றங்களை கற்றுத் தர உதவியாக இருக்கும் என்று கூறினார். அவர் கூறியது போலவே : ருதுராஜ் தற்போது மகாராஷ்டிரா பிரீமியர் லீக், துலீப் டிராபி போன்ற தொடர்களில் கேப்டனாக செயல்பட்டு வந்தாலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரில் இன்னும் அவருக்கு கூடுதல் அனுபவம் தேவை என்பதால் மேலும் ஒரு ஆண்டு தோனி அவருடன் பயணிக்க வேண்டும்.
இதையும் படிங்க : 8 ஆவது வீரராக களம் புகுந்து மிரட்டல் சாதனையை நிகழ்த்திய இங்கிலாந்து வீரர் – இலங்கை அணிக்கு எதிராக நடந்த சம்பவம்
அப்படி தோனி அவருக்கு பக்கபலமாக இருந்து அவர்க்கு இன்னும் முன்னேற்றத்திற்கான உதவிகளை செய்யும் பட்சத்தில் நிச்சயம் ருதுராஜ் கெய்க்வாட் வருங்காலத்தில் சென்னை அணியை தலைமை தாங்கி கொண்டு செல்ல அது உதவியாக இருக்கும் என கிரிக்கெட் நிபுணர்களும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.



