IPL 2023 : இந்த சீசனுடன் ஓய்வு பெறுவாரா? நண்பனாக தம்மிடம் தோனி சொன்னதை ரசிகர்களுக்கு கூறிய ரெய்னா

MS Dhoni Suresh Raina
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 6 வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை நெருங்கி வருகிறது. முன்னதாக அந்த அணிக்கு 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்ட போது கேப்டனாக பொறுப்பேற்ற எம்எஸ் தோனி இந்தியாவைப் போலவே மிகச் சிறப்பாக வழி நடத்தி 15 சீசன்களில் 13 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வைத்து 4 கோப்பைகளை வெல்வதில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

உலக அளவில் மகத்தான வீரராக பலருக்கு ரோல் மாடலாகவும் திகழும் அவர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற நிலையில் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுவதை ரசிகர்கள் வருடத்திற்கு ஒருமுறை பார்த்து மகிழ்ச்சியடைகின்றனர்.  இருப்பினும் விரைவில் 42 வயதை தொடும் அவர் முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருவதால் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தம்மை தல என்று கொண்டாடும் தமிழக ரசிகர்கள் மீது இருக்கும் பாசத்தால் தம்முடைய கேரியரின் கடைசி போட்டி சென்னை மண்ணில் தான் நடைபெறும் என்று அவர் தெரிவித்த நிலையில் 2019க்குப்பின் தற்போது சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

ரெய்னா உறுதி:
அத்துடன் தம்முடைய கேரியரின் கடைசி தருணங்களில் இருப்பதால் மகிழ்ச்சியுடன் விளையாடுவதாக ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியின் முடிவில் அவர் மீண்டும் தெரிவித்தார். மேலும் தோனி கடைசி சீசனில் விளையாடுகிறார் என்பதை உணர்ந்து பெங்களூரு, மும்பை போன்ற எதிரணி மைதானங்களிலும் மஞ்சள் உடை அணிந்து ஏராளமான ரசிகர்கள் மெகா ஆதரவு கொடுத்து வருகின்றனர். குறிப்பாக ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தாவை மிஞ்சும் அளவுக்கு தாம் ஓய்வு பெறுவதை உணர்ந்து வழியனுப்பும் வகையில் ஆதரவு கொடுத்த உள்ளூர் ரசிகர்களுக்கு தோனி மனதார நன்றி தெரிவித்தார்.

இந்த கருத்துக்கள் இந்த சீசனுடன் ஓய்வு பெறுவதை அவரே மறைமுகமாக உறுதிப்படுத்தியதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அதை அடிப்படையாக வைத்து லக்னோவுக்கு எதிரான போட்டியில் இந்த கடைசி சீசனில் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறீர்களா என்று வர்ணனையாளர் டேனி மோரிஸ் என்று கேட்டார். அதற்கு கடைசி சீசனில் விளையாடுகிறேன் என்பதை நீங்கள் தான் முடிவெடுத்துள்ளீர்கள் நான் இல்லை என்று தோனி தெரிவித்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

- Advertisement -

அந்த நிலையில் மும்பைக்கு எதிராக சேப்பாக்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட சென்னையின் மற்றொரு இதயம் சின்னத்தல ரெய்னா தன்னுடைய ஆதரவை கொடுத்து போட்டியின் முடிவில் பதிரானவுக்கு ஆட்டநாயகன் விருதை பரிசளித்தார். அதை விட போட்டியின் முடிவில் நேரில் சந்தித்த அவரது தோள் மீது தோளாக தோனி மகிழ்ச்சியுடன் சென்றது சென்னை ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் அந்தப் போட்டியின் முடிவில் தோனியிடம் ஓய்வு பற்றி கேட்டீர்களா என்று சமீபத்தில் ரெய்னாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ரெய்னா பதிலளித்தது பின்வருமாறு. “கோப்பையை வென்ற பின் நான் மேலும் ஒரு வருடம் விளையாடுவேன் என்று தோனி கூறினார். சிறப்பாக பேட்டிங் செய்யும் அவரது தலைமையில் சென்னை அணி மிகவும் சிறப்பாக செட்டாகியுள்ளது. எனவே அவர் தொடர்ந்து விளையாடுவதை தான் மொத்த இந்தியாவும் பார்க்க விரும்புகிறது என்று நினைக்கிறேன். இருப்பினும் இது உடல் நிலையைப் பொறுத்தது என்பதால் இறுதி முடிவை அவர் தான் எடுப்பார். ஆனால் எனக்குத் தெரிந்த வரை அவர் இன்னும் ஒரு சீசனில் விளையாடுவார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:வீடியோ : பரபரப்பான கடைசி பந்தில் பஞ்சாப்பை மாஸாக வீழ்த்திய ரிங்கு சிங் – ஆர்சிபி, மும்பையை மிஞ்சிய கொல்கத்தா

அதாவது இந்த வருடம் சிறப்பாக செயல்பட்டு வரும் சென்னை நிச்சயமாக கோப்பையை வெல்லும் என்ற 100% நம்பிக்கையுடன் இருக்கும் தோனி அடுத்த வருடமும் விளையாடுவேன் என்று சொன்னதாக ரெய்னா கூறியுள்ளார். இதிலிருந்து இந்த வருடம் 5வது கோப்பையை வென்று அடுத்த வருடம் வரை விளையாடுவதற்கு தோனி முடிவெடுத்துள்ளது தெரிகிறது.

Advertisement