முதல் டி20 ரத்து செய்யப்பட காரணமான தெ.ஆ வாரியம் கங்குலிய பாத்து கத்துக்கனும்.. கவாஸ்கர் விமர்சனம்

Sunil Gavaskar 3
- Advertisement -

தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 10ஆம் தேதி துவங்கியது. 2024 டி20 உலகக் கோப்பை தயாராகும் பயணத்தின் அங்கமாக நடைபெற்ற இத்தொடரில் இந்திய அணியில் ரோகித் சர்மா போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சமீபத்தில் ஆஸ்திரேலியாவை 4 – 1 என்ற கணக்கில் தோற்கடித்த சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் அணிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் கிங்ஸ்மீட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்க வேண்டிய முதல் போட்டி மழையால் டாஸ் கூட வீசப்படாமல் மொத்தமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கிங்ஸ்மீட் மைதானத்தை மொத்தமாக தார்ப்பாய் கொண்டு மூடாமல் பிட்ச்சை சுற்றிய பகுதிகளை மட்டுமே மூடியது போட்டி ரத்து செய்யப்படுவதற்கு மறைமுக காரணமாக அமைந்ததாக சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

கவாஸ்கர் அதிருப்தி:
அதாவது ஆரம்பத்தில் வந்த மழை சற்று நேரத்திற்குப் பின் நின்று விட்டது. அப்போது உடனடியாக போட்டியை துவக்க முடியாத அளவுக்கு வெளிப்புற களங்கள் தார்ப்பாய் கொண்டு மூடாமல் இருந்ததால் ஈரமாக இருந்தது. அதை மைதான பராமரிப்பாளர்கள் உலர்த்திக் கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் மழை வந்ததால் போட்டியை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.

அந்த வகையில் மைதானத்தை முழுவதுமாக தார்ப்பாய் கொண்டு மூடாத தென்னாப்பிரிக்க வாரியம் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய கவாஸ்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “மைதானம் முழுவதுமாக மூடப்படாததால் மழை நின்றாலும் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு போட்டியை துவங்க முடியாத நிலை உள்ளது. அப்போது திடீரென மழை வந்தால் உங்களால் ஓவர்கள் குறைத்து கூட விளையாட முடியாது. உலகின் அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் நிறைய பணத்தை வைத்துள்ளன. எனவே இது போன்ற தவறை செய்யாதீர்கள். உண்மையாக அனைத்து வாரியங்களிடமும் நிறைய பணம் இருக்கிறது”

- Advertisement -

“ஒருவேளை இல்லை என்று சொன்னால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம். பிசிசிஐ அளவுக்கு அவர்களிடம் பணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு மைதானத்தை மொத்தமாக தார்ப்பாய் கொண்டு மூடும் அளவுக்கு அவர்களிடம் பணம் இருக்கும். 2019 உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் மைதானங்கள் முழுவதுமாக மூடப்படாததால் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன”

இதையும் படிங்க: முதலாவது டி20 போட்டியில் மட்டுமின்றி எஞ்சியுள்ள 2 டி20 போட்டிகளிலும் இருந்து விலகவுள்ள இந்திய வீரர் – விவரம் இதோ

“குறிப்பாக தென்னாபிரிக்கா விளையாட விரும்பிய ஒரு போட்டி மழையால் நிறுத்தப்பட்டது. ஒருமுறை கொல்கத்தாவில் இதே போல மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. ஆனால் அடுத்த போட்டியிலேயே மொத்த மைதானத்தையும் கவர் செய்யும் அளவுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக சௌரவ் கங்குலி யாருமே ஈடன் கார்டன்ஸ் மைதானத்தை குறை சொல்ல முடியாத அளவுக்கு உடனடியாக வசதிகளை ஏற்படுத்தினார்” என்று கூறினார்.

Advertisement