பாகிஸ்தான் அணியின் வீக்கான வீரர் இவர்தான். அரையிறுதி தோல்விக்கு பிறகு – சுனில் கவாஸ்கர் கருத்து

Gavaskar
- Advertisement -

நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 176 ரன்களை குவிக்க அடுத்ததாக 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது.

wade 2

- Advertisement -

அப்போது இறுதியில் மூன்று ஓவருக்கு 37 ரன்கள் தேவைப்பட்டது. ஆஸ்திரேலிய அணி ஒருகட்டத்தில் 15 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த வேளையில் கடைசி 3 ஓவர்களில் 37 ரன்களை தடுத்து நிறுத்தி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த 37 ரன்களையும் இரண்டு ஓவர்களில் அடித்து ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக 19வது ஓவரில் மேத்யூ வேட் கொடுத்த ஒரு கேட்ச்யை ஹசன் அலி தவற விட்டார். அவர் நழுவ விட்ட அந்த கேட்சே போட்டியின் தோல்விக்கு காரணம் என்று பல்வேறு விமர்சனங்கள் அவர் மீது எழுந்துள்ளன.

Hasan-ali

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வர பாகிஸ்தான் அணியின் பலவீனம் எது என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்: முக்கியமான போட்டிகளில் பிரஷர் காரணமாக நல்ல பீல்டர்கள் கூட கேட்ச் பிடிக்க தவறுகிறார்கள். அந்த வகையில் ஹசன் அலி எளிதான கேட்சை கோட்டைவிட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : 2 நாள் ICU-ல இருந்தும் அரையிறுதியில் விளையாடிய பாக் வீரர் – என்னவொரு டெடிகேஷன்

என்னை பொருத்தவரை பாகிஸ்தான் அணியின் பலவீனமான வீரர் அவர்தான். இந்த தொடரின் அவர் சரியாக பந்து வீசவில்லை மேலும் பேட்டிங்கில் அவர் எவ்வாறு செயல்படுவார் என்பது நமக்கு இன்னும் தெரியவில்லை. அதேபோன்று பீல்டிங் அவர் தவறு செய்துள்ளார். சில நேரங்களில் ஒவ்வொரு அணியிலும் பலவீனமான வீரர்கள் இருப்பது வழக்கம் தான். அந்த வகையில் பாகிஸ்தான் அணிக்கு ஹசன் அலி பலவீனமானவர் என்று கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement