மேக்ஸ்வெலையே சாய்ச்சுடீங்க.. உங்களை அங்க சந்திக்க காத்திருக்கேன் தம்பி.. மயங் யாதவுக்கு ஸ்மித் பாராட்டு

Steve Smith 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் 21 வயதாகும் இளம் இந்திய வீரர் மயங் யாதவ் அதிரடியான வேகத்தில் பந்து வீசி ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். இந்த வருடம் லக்னோ அணிக்காக அறிமுகமான அவர் பஞ்சாபுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகள் எடுத்து முதல் வெற்றியை பெற்றுக் கொடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற பெங்களூருக்கு எதிரான போட்டியிலும் 4 ஓவரில் 14 ரன்கள் மட்டும் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் எடுத்த அவர் மீண்டும் லக்னோவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். அதன் வாயிலாக 17 வருட ஐபிஎல் வரலாற்றில் எனது முதல் 2 போட்டிகளிலும் இரண்டு ஆட்டநாயகன் விருது பெற்ற முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையும் அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

ஸ்மித் பாராட்டு:
அதை விட தொடர்ந்து 145 – 155 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் அவர் 2024 ஐபிஎல் தொடரில் அதிவேகமான பந்தை (157.60) வீசிய பவுலராக சாதனையும் படைத்துள்ளார். அதனால் இந்தியா தன்னுடைய வேகப்பந்து வீச்சாளரை கண்டுபிடித்து விட்டதாக அவரை பிரட் லீ, டேல் ஸ்டைன் போன்ற வெளிநாட்டு ஜாம்பவான் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவுக்காக எதிரான ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற உள்ள 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் மயங் யாதவை எதிர்கொள்ள காத்திருப்பதாக ஸ்டீவ் ஸ்மித் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “மயங் யாதவ் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் விளையாட வேண்டும். அவரை எதிர்கொள்வதற்காக நான் காத்திருக்கிறேன்”

- Advertisement -

“4 ஓவர் வீசுவதற்கும் 20 ஓவர் வீசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் இதுவரை பார்த்ததில் மயங்கி யாதவின் வளர்ச்சி அதிகம் குப்பையை கொடுக்கவில்லை. ஏனெனில் அவர் நல்ல ஏரியாக்களில் பந்தை அடிக்கிறார். அவரைப் போன்ற இளம் வீரர்கள் ஷார்ட் லைனில் நல்ல வேகத்தில் வீசுகின்றனர். எனவே அவர்கள் இன்னும் கொஞ்சம் தெளிந்தால் நீண்ட தூரம் பயணம் செல்ல முடியும்”

இதையும் படிங்க: எடுத்ததும் இந்திய அணியில் சான்ஸ் கொடுக்காதீங்க.. முதலில் அவருக்கு அந்த வாய்ப்பை கொடுங்க.. பிஷப் கோரிக்கை

“155 வேகத்தில் வரும் பந்துகளுக்கு எதிராக நீங்கள் உண்மையில் ரிஸ்க் எடுக்க வேண்டும். அதை கொள்வது எளிதான காரியம் அல்ல. பெரும்பாலான வீரர்கள் தங்களுடைய அறிமுகப் போட்டியில் அசத்திய பின் அப்படியே பின்தங்கி விடுவார்கள். ஆனால் இவர் அங்கிருந்து மீண்டும் வந்து கிளன் மேக்ஸ்வெல் போன்ற சிறந்த டி20 பேட்ஸ்மேனை அவுட்டாக்கினார். மேலும் கேமரூன் கிரீன், ரஜத் படிதார் போன்ற வேகத்தை திறம்பட எதிர்கொள்ளும் வீரர்களையும் அவர் அவுட்டாக்கினார்” என்று கூறினார்.

Advertisement