சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயர் இவரால் தான் கிடைத்தது – பாராட்டு விழாவில் பேசிய ஸ்ரீநிவாசன்

CSK-2
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக கோப்பையை வென்று அசத்தி இருந்தது. கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் முதல் அணியாக வெளியேறிய சென்னை அணியாது நிச்சயம் இந்த ஆண்டு மீண்டுவந்து பலமாக திரும்பும் கேப்டன் தோனி என்று கூறியிருந்தார். அதற்கேற்றார் போலவே இந்தாண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் பிளே ஆப் சுற்றில் முதல் அணியாக தகுதி பெற்றது.

csk 1

- Advertisement -

மேலும் சென்னை அணியானது இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் முதல் அணியாக பதிவு செய்திருந்தது. அதை தொடர்ந்து கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை அணி பிரமாதமான வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் சென்னை அணி பெற்ற இந்த வெற்றியை பாராட்டும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நேற்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த பாராட்டு விழாவில் முன்னாள் கேப்டன் கபில் தேவ், தமிழக முதல்வர் ஸ்டாலின், கேப்டன் தோனி இன்னும் சில சிஎஸ்கே வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த பாராட்டு விழாவில் பேசிய அனைவரும் சிறப்பான உரை அளித்திருந்தனர். அந்த வகையில் சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனும் ஒரு சூப்பரான தகவலை நமக்கு வழங்கியுள்ளார்.

srikanth

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்ற பெயர் எப்படி வந்தது என்ற சுவாரசிய தகவலை அவர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சென்னை அணியை நாங்கள் வாங்கிய பிறகு ஒரு நல்ல பெயரை வைக்க வேண்டும் என்று நினைத்தோம். அப்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ஸ்ரீகாந்த் தான் குலுக்கல் சீட்டு முறையில் இந்த பெயரை எழுதி போட்டதாகவும், அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயரே அதிக முறை அந்த குலுக்கலில் வந்ததால் அந்தப் பெயரையே நாங்கள் அணிக்கு வைத்தோம் என்ற அட்டகாசமான தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : IPL 2022 : சி.எஸ்.கே அணியின் பாராட்டு விழாவில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட – ஜெய் ஷா (ரசிகர்கள் ஹேப்பி)

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வரும் ஸ்ரீகாந்த் இந்திய அணியின் முன்னாள் வீரர் என்பதைத் தாண்டி தற்போது வர்ணனையில் தனது பேச்சுக்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement