IPL 2022 : சி.எஸ்.கே அணியின் பாராட்டு விழாவில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட – ஜெய் ஷா (ரசிகர்கள் ஹேப்பி)

Jay-shah
- Advertisement -

இந்தியாவில் தொடங்கிய 14-வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த வேளையில் வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா வைரஸ் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்பு மீதமுள்ள ஆட்டங்கள் இரண்டாவது பாதியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த இரண்டாம் பாகத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது.

csk 1

- Advertisement -

சென்னை அணியின் இந்த வெற்றியை பாராட்டும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று கலைவாணர் அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் கேப்டன் கபில்தேவ், தமிழக முதல்வர் ஸ்டாலின், பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா, சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன், கேப்டன் தோனி மற்றும் அணி வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் பாராட்டு விழாவில் கேப்டன் தோனி, முதல்வர் ஸ்டாலின், சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் போன்றோர் உரையாற்றி இருந்தனர். அந்தவகையில் பிசிசிஐ-யின் செயலாளர் ஜெய் ஷாவும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். மேலும் அவர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரின் 15வது சீசன் குறித்தும் பல்வேறு முக்கிய அப்டேட்களை கொடுத்துள்ளார்.

Stalin

அதன்படி அவர் கூறுகையில் : அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் நிச்சயம் இந்தியாவில்தான் நடைபெறும். கூடுதலாக இரண்டு அணிகள் இந்த தொடரில் இணைவதால் நிச்சயம் இந்த தொடர் எனது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாத்தா இருக்கும். அதுமட்டுமின்றி சென்னை அணியின் ரசிகர்கள் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று ஆவலுடன் காத்துள்ளனர் என்பதை நான் அறிவேன்.

- Advertisement -

இதையும் படிங்க : என்னோட 2 ஆவது ஐ.பி.எல் லயே நான் 6-7 கோடிக்கு ஏலம் போவேன்னு 2 பேர் சொன்னாங்க – பாண்டியா ஓபன்டாக்

அதற்கான தருணம் நீண்ட தூரம் இல்லை. நிச்சயம் ஐ.பி.எல் தொடரின் 15-ஆவது சீசன் இந்தியாவில் தான் நடைபெறும் என்றும் அதில் இரண்டு புதிய அணிகளுடன் இன்னும் சுவாரசியமாக போட்டிகள் நடைபெறும் என்றும் கூறினார். மேலும் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி சென்னையிலும் போட்டிகள் நடைபெறும் என்பதை அவர் உறுதி செய்துள்ளார். அவரின் இந்த கருத்தால் தமிழக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement