படிடாரை ட்ராப் பண்ணிட்டு விராட் கோலியுடன் அவரை இறக்குங்க.. ஆர்சிபி வெற்றிக்கு ஸ்ரீகாந்த் ஆலோசனை

Srikkanth 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தங்களுடைய முதல் 3 போட்டிகளில் 2 தோல்விகளையும் ஒரு வெற்றியையும் மட்டுமே பதிவு செய்து தடுமாறி வருகிறது. குறிப்பாக கொல்கத்தாவுக்கு எதிராக நடந்த 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு போராடி 182 ரன்கள் அடித்தது. ஆனால் அதை சேசிங் செய்த கொல்கத்தா அசால்டாக 16.5 ஓவரில் பெங்களூரு பவுலர்களை அடித்து நொறுக்கி வெற்றி கண்டது.

அதன் வாயிலாக தங்களுடைய சொந்த ஊரில் எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் தொடர்ந்து 9வது வருடமாக 6வது போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக பெங்களூரு பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. அந்த போட்டியில் விராட் கோலி பேட்ஸ்மேன்கள் மிகவும் போராடி எடுத்த ரன்களை வழக்கம் போல பெங்களூரு பவுலர்கள் பந்து வீச்சில் வள்ளலாக வாரி வழங்கி வெற்றியை தாரை வரத்தினர்.

- Advertisement -

ஸ்ரீகாந்த் ஆலோசனை:
அதனால் இந்த பவுலிங்கை வைத்துக் கொண்டு பெங்களூரு முதல் கோப்பையை வெல்ல முடியாது என்று நிறைய விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் பெங்களூரு வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டுமெனில் முதலில் தடுமாற்றமாக பேட்டிங் செய்து வரும் ரஜத் படிடாரை நீக்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக இங்கிலாந்தின் ஆல் ரவுண்டர் வில் ஜேக்ஸை அணிக்குள் கொண்டு வந்து நேரடியாக விராட் கோலியுடன் ஓப்பனிங்கில் களமிறக்க வேண்டும் என்றும் ஸ்ரீகாந்த் அதிரடியான ஆலோசனை கொடுத்துள்ளார்.

அத்துடன் பந்து வீச்சில் வள்ளலாக செயல்படும் அல்சாரி ஜோசப்பை நீக்கி விட்டு சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி அசத்திய இந்தியாவின் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “வில் ஜேக்ஸ் சிறப்பான ஆஃப் ஸ்பின்னர். அவரிடமிருந்து நம்மால் 2 ஓவர்களை பெற முடியும் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“என்னைப் பொறுத்த வரை நான் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்தால் விராட் கோலியுடன் ஓப்பனிங்கில் வில் ஜேக்ஸை களமிறக்குவேன். 3வது இடத்தில் டு பிளேஸிஸ், 4வது இடத்தில் கிரீன், 5வது இடத்தில் கிளன் மேக்ஸ்வெல் ஆகியோரை விளையாட வைப்பேன். மேலும் நீங்கள் அல்சாரி ஜோசப், ரஜத் படிடார் ஆகியோரை நீக்கி விட்டு இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பை தேர்ந்தெடுக்க வேண்டும்”

இதையும் படிங்க: பாகிஸ்தானை பொளந்த தோனியை மறுபடியும் பாக்குறேன்.. இதை நீங்க செஞ்சு தான் ஆகணும்.. கைஃப் கருத்து

“இப்படி செய்தால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமநிலை ஏற்படும். ஆனால் கடந்த போட்டியில் ஆர்சிபி பவுலர்கள் தொண்டை உயரத்தில் ஒரு பவுன்சர் பந்தை கூட வீசாதது எனக்கு ஆச்சரியமாக அமைந்தது. அவர்கள் சுனில் நரேன் போன்றவரை கிட்டத்தட்ட அரை சதம் அடிக்க விட்டனர்” என்று கூறினார்.

Advertisement