- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அண்ணனுக்கு கொரோனா உறுதி. தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்ட கங்குலி – காரணம் இதுதான்

முன்னாள் இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் சவுரவ் கங்குலி. தற்போது பிசிசிஐயின் தலைவராக இருக்கிறார். இவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். இவருக்கு மூத்த சகோதரர் ஒருவர் இருக்கிறார். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் இவரது மூத்த சகோதரர் சினேகாஷிசின் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

மேலும் அவரது மனைவியின் பெற்றோருக்கும் இந்த தொற்று உருவாகியது. இதன் காரணமாக அவரும் அவரது மனைவியின் குடும்பத்தாரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் கங்குலியின் மூத்த சகோதரருக்கும் இந்த வைரஸ் தொற்று தற்போது கொரோனா சோதனையின் மூலம் உறுதிசெய்யப்பட்டதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

தற்போது கங்குலி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் அவர்களது பூர்வீக வீட்டில் ஒன்றாக வசித்து வருகின்றனர் .இதன் காரணமாக கங்குலி தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார் .இதுகுறித்து அவர் கூறுகையில்..


.
எனது சகோதரருக்கு கடந்த சில நாட்களாக அதிக காய்ச்சல் இருந்து வந்தது மருத்துவமனையில் கொடுத்து டெஸ்ட் எடுக்கச் சொன்னார். இன்றுதான் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன் ஏனெனில் எங்களது தொழிற்சாலைக்கு எனது சகோதரர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

இதன் காரணமாக எனது ஊழியர்களையும் தனிமைப் படுத்திக்கொள்ள கூறியுள்ளேன் இவ்வாறு கூறியுள்ளார் சௌரவ் கங்குலி. கடந்த 8 ஆம் தேதி தனது பிறந்தநாளை எளிமையாக கங்குலி கொண்டாடினாலும் அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவரது அண்ணனும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக கங்குலி தனிமைப்படுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by