அந்த சாவலை எதிர்கொண்டு விளையாட காத்திருக்கிறேன்.. 2024 ஐ.பி.எல் குறித்து – சுப்மன் கில் கருத்து

Gill
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு 2024-ல் ஐபிஎல் தொடரின் 17-ஆவது சீசன் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் வேளையில் துபாயில் இன்னும் சில நாட்களில் வீரர்களுக்கான ஏலம் நடைபெற இருக்கிறது. அந்த ஏலத்திற்கு பின்னர் ஒவ்வொரு அணியுமே தங்களது அணியில் உள்ள அனைத்து வீரர்களின் பட்டியலையும் முழுவதுமாக வெளியிடும்.

அதை தவிர்த்து தற்போதே டிரேடிங் முறையில் சில வீரர்கள் அணிமாற்றமும் செய்துள்ளனர். அந்த வகையில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹார்டிக் பாண்டியா மும்பை அணியால் டிரேடிங் மூலம் வாங்கப்பட்டுள்ளதால் குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த சுப்மன் கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட போது அவரை ஏலத்திற்கு முன்பாக நேரடியாக அணியில் எடுத்த குஜராத் டைட்டன்ஸ் அவருக்கு ஒரு பெரிய தொகையையும் சம்பளமாக வழங்கி அவரின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தனர்.

அதற்கு பலனாக அறிமுக ஆண்டிலேயே குஜராத் அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அந்த கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். அதேபோன்று நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராகவும் தனது பெயரை பதிவு செய்திருந்தார். அவரது இந்த அபாரமான திறமை காரணமாக தற்போது அவருக்கு குஜராத் அணி கேப்டன் பதவியையும் வழங்கி உள்ளது.

- Advertisement -

24 வயதே ஆன சுப்மன் கில் விராட் கோலிக்கு அடுத்து இளம் வயதில் ஐபிஎல் கேப்டனான இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் இந்த 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ஒரு கேப்டனாக எவ்வாறு செயல்படப்போகிறேன்? என்பது குறித்து பேசிய சுப்மன் கில் கூறுகையில் : குஜராத் அணியை தலைமை தாங்கி வழிநடத்த இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்காக அவர்கள் வழங்கியுள்ள இந்த கேப்டன் பதவிக்கு நான் என்னுடைய முழு பங்களிப்பையும் வழங்க விரும்புகிறேன்.

இதையும் படிங்க : என்னுடைய கால் உடையும் வரை.. இந்தியாவில் அதுல விளையாடிக்கிட்டே இருப்பேன்.. கிளன் மேக்ஸ்வெல் ஓப்பன்டாக்

ஐபிஎல் போன்ற ஒரு பெரிய தொடரில் கேப்டனாக பல சவால்கள் இருக்கும். ஆனாலும் அதையெல்லாம் கற்றுக் கொண்டு நான் அனியை வழி நடத்த வேண்டும் என்று நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் கேப்டன்சி என்னுடைய பேட்டிங்கிலும், என்னுடைய செயல்பாடுகளிலும் முன்னேற்றத்தை கொண்டு வரும் என்றும் நான் நம்புகிறேன். எதிர்வரும் இந்த ஐபிஎல் தொடரில் கேப்டன்சி செய்யும் போது பெரிய பெரிய அனுபவ கேப்டன்களுக்கு எதிராகவும் உள்ள சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கிறேன் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement