- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மைதான உயரத்திற்கு மிரட்டலான சிக்ஸ் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர். அசந்துபோன கோலி – வீடியோ இதோ

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 142 ரன்களை குவிக்க அதன்பின்னர் இலக்கை எதிர்த்து ஆடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

- Advertisement -

இந்தப்போட்டியில் மூன்றாவது வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். மொத்தம் 26 பந்துகளைச் சந்தித்த ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகள் என 34 ரன்கள் குவித்து வெற்றிக்கு அருகில் ஆட்டமிழந்தார். அதிலும் தற்போது அவர் அடித்த ஒரு இமாலய சிக்சர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி இலங்கை வீரர் ஹசரங்கா வீசிய 16-வது ஓவரில் கடைசி பந்தை தூக்கி நின்ற இடத்தில் இருந்து தூக்கி அடித்த ஐயர் மைதான உயரத்திற்கு மேலே அடித்தார். அந்த பந்து மைதானத்தின் மேற்கூரையில் பட்டு கீழே விழுந்தது. இதனை எதிர்முனையில் இருந்து கவனித்த இந்திய அணியின் கேப்டன் கோலி மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து வாவ் என்று மிரண்டார்.

ஐயரும் இவ்வளவு பெரிய சிக்ஸரா என்று யோசிப்பது போல அந்த பந்தினை பார்த்தார் இவர்கள் இருவரது ரியாக்சனும் கூடிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by