சுனில் நரேன் இல்ல.. ஆட்டத்தை மாத்துனதே அவரு போட்ட ஒரு ஓவர் தான் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

Shreyas
- Advertisement -

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 36-வது லீக் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை சொந்த மண்ணில் வெளிப்படுத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியை பெற்றதோடு சேர்த்து இந்த தொடரில் தங்களது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 222 என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது.

- Advertisement -

கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 50 ரன்களையும், பிலிப் சால்ட் 48 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் குவித்தது.

இதன் காரணமாக கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : இந்த போட்டியில் பல்வேறு உணர்வுகள் கலவையாக இருந்தன.

- Advertisement -

அதோடு இறுதிவரை அமைதியாக இருந்து இந்த போட்டியில் வென்றது சற்று கடினமாகவே இருக்கிறது. இருப்பினும் இறுதியில் நாங்கள் இரண்டு புள்ளிகளை வென்றதில் மகிழ்ச்சி. உண்மையிலேயே இந்த போட்டி கடைசி வரை அழுத்தமாகவே இருந்தது. ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை இந்த போட்டியில் சரியாக வழங்கினார். ரசல் 2 விக்கெட்டுகளை ஒரே ஓவரில் கைப்பற்றி போட்டியை எங்களது பக்கம் திரும்பினார்.

இதையும் படிங்க : ஒரே ஓவர்தான் எல்லாத்தையும் மாத்திட்டாரு.. எங்களோட வெற்றியையும் அவர் பறிச்சிட்டாரு – டூபிளெஸ்ஸிஸ் வருத்தம்

அது போன்ற ஒரு செயல்பாடு தான் எங்களுக்கு தேவையாக இருந்தது. கடைசி ஓவரில் 18 ரன்கள் சென்றதும் பந்துவீச்சாளர் மீது அழுத்தம் ஏற்பட்டது. இருந்தாலும் இறுதிவரை பொறுமையாக இருந்து வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இந்த வெற்றி எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. இனிவரும் போட்டிகளிலும் இதே வெற்றியை தொடர்வோம் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement