எங்க தப்பு நடந்துச்சுனே தெரியல.. 261 ரன் அடிச்சும் தோல்வியை சந்தித்தது ஏன்? – ஷ்ரேயாஸ் ஐயர் பேசியது என்ன?

Shreyas
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 42-ஆவது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் என்கிற பிரமாண்ட ரன் குவிப்பை வழங்கியது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர்களான பிலிப் சால்ட் 75 ரன்களையும், சுனில் நரேன் 71 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 262 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கி 18.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 262 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பாக பேர்ஸ்டோ 108 ரன்களையும், ஷஷாங்க் சிங் 68 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : 260 ரன்கள் என்பது வெற்றிக்கு போதுமான ரன்கள் தான். இந்த போட்டியில் எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். அதிலும் சுனில் நரேன் மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் பேட்டிங் செய்ததை பார்க்க அற்புதமாக இருந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் 2 அணிகளின் வீரர்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இந்த போட்டியில் நாங்கள் 260 ரன்கள் குவித்தும் தோல்வியை சந்தித்துள்ளது வருத்தமாக உள்ளது. தப்பு எங்கு நடந்தது என்பதே எனக்கு தெரியவில்லை. இருப்பினும் இதுபோன்ற முடிவுகளும் கிடைக்கும் என்பதை மனதில் வைத்து அதற்கு ஏற்றாற்போன்று தயாராக விரும்புகிறோம்.

இதையும் படிங்க : தோனி, ருதுராஜ் பத்தி நான் தப்பா சொன்னேனா.. யாருங்க நீங்க எல்லாம் – கொந்தளித்த அம்பத்தி ராயுடு

இனிவரும் போட்டிகளில் இதைவிட நல்ல திட்டத்துடன் களத்திற்கு திரும்புவோம். சுனில் நரேன் ஆடுவதை பார்க்க அற்புதமாக இருக்கிறது. அவர் களத்திற்கு செல்லும் முதல் பந்தில் இருந்து அடித்து ஆடுகிறார். நிச்சயம் அவரது இந்த சிறப்பான பார்மை இந்த தொடர் முழுவதும் வெளிப்படுத்துவார் என்று நம்புவதாக ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement