சேப்பாக்கம் எப்படின்னு நல்லா தெரிஞ்சி வச்சிருக்காங்க.. தோல்விக்கு பின் சி.எஸ்.கே வீரர்களை பாராட்டிய – ஷ்ரேயாஸ் ஐயர்

Shreyas
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22-ஆவது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணி சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 34 ரன்களை குவித்தார்.

- Advertisement -

சென்னை சார்பாக துஷார் தேஷ்பாண்டே மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். பின்னர் 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 141 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : இந்த போட்டியின் பவர்பிளேவில் நாங்கள் மிகச் சிறப்பாக தான் ஆட்டத்தை துவங்கினோம். ஆனாலும் மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் அந்த சரிவிலிருந்து மீண்டு வர முடியவில்லை.

- Advertisement -

மேலும் இந்த மைதானத்தின் சூழ்நிலையை கணித்து எங்களால் விளையாட முடியாமல் போனது. பவர்பிளேவிற்கு பிறகு மைதானம் ரன் குவிக்க கடினமாக மாறியது. அதே வேளையில் சிஎஸ்கே அணியின் வீரர்கள் இந்த மைதானத்தின் சூழ்நிலைகளை நன்றாக கணித்துள்ளனர். அவர்களது பந்துவீச்சும் திட்டத்திற்கு ஏற்றார் போன்று இருந்ததால் எங்களது பேட்ஸ்மேன்களால் ரன்களை குவிக்க முடியாமல் போனது.

இதையும் படிங்க : தல போல வருமா.. 10 வருடத்துக்கு முன் விராட் கோலி மீதான அதே அன்பை ருதுராஜ் மீது காட்டிய தோனி

இந்த போட்டியில் 160 முதல் 170 ரன்கள் வரை அடித்திருந்தால் நிச்சயம் அது ஒரு நல்ல ஸ்கோராக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததாலே முமென்டமும் மாறியது. சென்னை அணியின் வீரர்கள் இந்த மைதானத்தின் தன்மையை மிகக் கச்சிதமாக புரிந்து வைத்திருப்பதாலே அவர்களால் எளிதான வெற்றியை பெற முடிந்தது என ஷ்ரேயாஸ் ஐயர் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement