தோனி எப்போ பேட்டிங் பண்ணாலும் எனக்கு அந்த பயம் இருக்குங்க – வெற்றிக்கு பிறகு பேசிய ஷ்ரேயாஸ் ஐயர்

Shreyas-2
- Advertisement -

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று பிரம்மாண்டமாக துவங்கிய 15-வது ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச பந்துவீச்சை தீர்மானம் செய்ய அதன்படி முதலில் விளையாடிய சிஎஸ்கே அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை மட்டுமே குவித்தது.

kkrvscsk

- Advertisement -

அதனை தொடர்ந்து 132 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 133 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சொற்ப ரன்களை மட்டுமே குதித்து இருந்தாலும் அந்த அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் ஆட்டம் ரசிகர்கள் பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது.

ஏனெனில் தற்போது 40 வயதான அவர் அணியின் நலன் கருதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது கேப்டன் பதவியில் இருந்து வெளியேறி அணியில் ஒரு வீரராகவே தொடர்வேன் என்று தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து இந்த தொடரில் அவரது பேட்டிங் எவ்வாறு இருக்கப்போகிறது என்று அனைவரும் எதிர்ப்பார்த்திருந்த வேளையில் 38 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 50 ரன்களை குவித்தார்.

Dhoni

இந்நிலையில் இப்படி தோனி சிறப்பாக விளையாடியதற்கு பிறகு எதிரணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயரும் தோனி குறித்து சில கருத்துகளை வெற்றிக்குப் பிறகு பகிர்ந்துகொண்டார். அப்படி போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர் பேசுகையில் : எப்போது தோனி பேட்டிங் செய்தாலும் எனக்கு ஒருவித டென்சன் இருந்து கொண்டே இருக்கும். ஏனெனில் போட்டியின் எந்த நேரத்திலும் மொமண்டத்தை மாற்றும் பவர் தோனியிடம் உள்ளது.

- Advertisement -

அதோடு மைதானத்திலும் சற்று பனிப்பொழிவு இருந்ததால் பந்தை கிரிப் செய்ய கடினமாக இருந்தது. இந்த ஆண்டு புதிய அணிக்காக தலைமைப் பொறுப்பை ஏற்று விளையாடுவதில் மகிழ்ச்சி. என்னை நம்பி கொல்கத்தா அணியின் நிர்வாகமும், ஊழியர்களும் மிகப்பெரிய பொறுப்பினை கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : சரியான நேரத்தில் சரியான டிசிஷன் – தோனியை வெளிப்படையாக பாராட்டிய டீ வில்லியர்ஸ் (எதற்கு தெரியுமா?)

இந்த வெற்றியை அப்படியே கொண்டு செல்ல விரும்புகிறேன் என்றும் இந்தப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் மிகச் சிறப்பாக பந்து வீசினார் என்றும் ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement