தோல்வி அடைந்தாலும் இவரது பவுலிங் மும்பை அணிக்கு பிரச்சனையை தந்தது – சீனியர் பவுலரை புகழ்ந்த ஐயர்

Iyer
- Advertisement -

ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது.

dcvsmi

- Advertisement -

அதிகபட்சமாக இஷான் கிஷன் 30 பந்துகளில் 55 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 38 பந்துகளில் 51 ரன்களையும் குவித்தனர். இறுதிநேரத்தில் களம் புகுந்த ஹர்டிக் பாண்டியா 14 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 37 ரன்களை குவித்து அசத்தினார். அதன் பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே அடித்தது.

இதனால் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி சார்பாக பும்ரா சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 14 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டிரென்ட் போல்ட் இரண்டு ஓவர்கள் வீசி 9 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக பும்ரா தேர்வானார்.

boult

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து பாராட்டிப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : அஸ்வின் இந்த போட்டியில் பாசிட்டிவ் எண்ணத்துடன் பந்துவீசினார். அவர் திறமையான பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எப்போதும் சிறப்பாக பந்து வீசுகிறார்.

Ashwin 2

அவரது பந்து வீச்சு நிச்சயம் மும்பை போன்ற எதிரணிக்கு சிரமத்தை கொடுக்கும் ஒரு விடயமாக அமைந்துள்ளது. அவரை அணியில் வைத்திருப்பது எங்களுக்கு மிகவும் நல்ல விடயம் இன்னும் சொல்லப்போனால் அவர் எங்கள் அணியில் ஒரு சொத்து என்று ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement