இந்தியாவுக்காக அந்த 2 கோப்பை ஜெயிக்காம.. இப்போதைக்கு ரிட்டையராகும் ஐடியா இல்ல.. ரோஹித் சர்மா ஓப்பன்டாக்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை அணி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது. குறிப்பாக 5 கோப்பைகளை வென்று கொடுத்தும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவரை மும்பை கழற்றி விட்டுள்ளது. இருப்பினும் அடுத்ததாக நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா இந்தியாவின் கேப்டனாக செயல்பட உள்ளார்.

அதுவே இந்தியாவின் கேப்டனாக அவருக்கு கடைசி தொடராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் விராட் கோலிக்கு பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற அவருடைய தலைமையில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக முன்னேறிய இந்தியா 2023 ஆசிய கோப்பையை மட்டும் வென்றது. அதை தவிர்த்து 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ரிட்டையர்மென்ட் ஐடியா:
மேலும் விரைவில் 37 வயதை தொடும் ரோகித் சர்மா இன்னும் ஓரிரு வருடங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று ரோஹித் சர்மா அறிவித்துள்ளார். மேலும் 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் இந்தியாவுக்காக வெற்றி காண்பதே தம்முடைய லட்சியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஓய்வு பற்றி உண்மையாக நான் நினைக்கவில்லை. ஆனால் வாழ்க்கை உங்களை எங்கே எடுத்துச் செல்லும் என்பது எனக்கு தெரியாது. தற்போதைய நிலையில் நான் நன்றாக விளையாடுகிறேன். எனவே இப்படியே இன்னும் சில வருடங்கள் விளையாடுவதைப் பற்றி நான் நினைக்கிறேன். உண்மையாக நான் உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறேன்”

- Advertisement -

“அத்துடன் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நடைபெற உள்ளது. அதற்கு இந்தியா தகுதி பெறும் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்த வரை 50 ஓவர் உலகக் கோப்பை தான் உண்மையான உலகக் கோப்பை. அதைப் பார்த்தே நாங்கள் வளர்ந்தோம். சென்ற முறை அது எங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்றது. அதில் நாங்கள் ஃபைனல் வரை நன்றாக விளையாடினோம்”

இதையும் படிங்க: 250 ரன்கள் அடிச்சிருந்தால் கூட பத்தியிருக்காது போல.. மும்பை அணிக்கெதிரான தோல்வி குறித்து – டூபிளெஸ்ஸிஸ் வருத்தம்

“செமி ஃபைனலில் வென்ற போது கோப்பையை வெல்வதற்கு ஒரு படி மட்டுமே இருப்பதாக நான் நினைத்தேன். எந்த ஒரு விஷயம் உலகக் கோப்பையில் எங்களை தோல்வியடைய வைத்தது? அதில் தவறாக சென்ற ஒரு விஷயம் கூட எனக்கு தெரியவில்லை. ஏனெனில் நாங்கள் அனைத்து கட்டங்களையும் நிரப்பிய நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம். ஃபைனலில் நாங்கள் மோசமாக விளையாடியதாக தெரியவில்லை. ஆனால் அது மோசமான நாளாக அமைந்தது. அதே சமயம் ஆஸ்திரேலியா எங்களை விட சற்று சிறப்பாக செயல்பட்டது” என்று கூறினார்.

Advertisement