- Advertisement -
உலக கிரிக்கெட்

ஏன் இதையெல்லாம் சாப்பிட்டு எங்களை சாகடிக்கிறீர்கள். நீங்கள் தான் எல்லாத்துக்கும் காரணம் – அக்தர் காட்டம்

உலகம் முழுவது கோரோனா வைரஸ் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் இருந்து ஆரம்பித்த இந்த வைரஸ் தற்போது 145 நாடுகளுக்கு பரவியுள்ளது. மொத்தம் 145000 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5500 பேர் இறந்துள்ளனர். 73500 பேர் சிகிச்சை கொடுத்து மீட்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக சீனாவில் 3000 பேரும் இத்தாலியில் 2000 பேரும் இறந்துள்ளனர். இந்தியாவில் இரண்டு பேர் இறந்ததுடன் மேலும் இந்தியாவில் 140பேருக்கு இந்த வைரஸ் தொற்று பாதித்துள்ளது. இப்படியாக உலகமே ஆட்டம் கண்டுள்ளது. அதனால் இந்தியாவில் நடைபெற இருந்த பல்வேறு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

- Advertisement -

இந்நிலையில் இவ்வாறு இந்த பாதிப்பு ஏற்பட முக்கிய காரணம் சீனர்கள் தான் என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறியுள்ளார். இதுகுறித்து தன் யூடியூப்பில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில் கூறியுள்ளாதாவது :

எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீங்கள் ஏன் வவ்வால் அதன் ரத்தம் சிறுநீர் என அனைத்தையும் குடிக்கீர்கள் என தெரியவில்லை. உங்களால் தற்போது உலகமே அவதிக்குள்ளாகி உள்ளது. இதனால் ஒரு கொடூரமான வைரஸ் ஒன்றை உருவாக்கி உலகம் முழுவதும் பரப்பி இருக்கிறீர்கள் நீங்கள். எனக்கு புரியவில்லை. ஏன் நாய், பூனை என அனைத்தையும் சாப்பிடுகிறீர்கள்.

- Advertisement -

நான் சீனர்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் விலங்குகளுக்கு ஆதரவாக பேசுகிறேன். அதன்படி
தற்போது இவர்களின் இந்த மோசமான உணவு முறைகளாலே இதுபோன்ற ஆபத்து ஏற்பட்டது என சீனர்களை சாடியுள்ளார் சோயப் அக்தர்.

உலக அளவில் தற்போது பெரும் அச்சத்தை ஏற்படுத்திய இந்த நோயின் காரணமாக மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கே பயப்படுகின்றனர். மேலும் எப்போது இந்த நிலைமை மாறும் என்றும் எதிர்பார்த்து வருகின்றனர்.

- Advertisement -
Published by