மிகப்பெரிய அவமானம்.. 1999 வலியை மறுபடியும் பாக்குறேன்.. தகுதியற்ற பாகிஸ்தானை விளாசிய கம்ரான் அக்மல், அக்தர்

Pakistan Team
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்திய அமெரிக்கா அற்புதமான வெற்றி பெற்றுள்ளது. ஜூன் 6ஆம் தேதி டாலஸ் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் பாகிஸ்தான் 20 ஓவரில் 159/7 ரன்கள் எடுத்தது. அதைத் துரத்திய அமெரிக்காவும் மிகச் சரியாக 20 ஓவரில் 159/3 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது.

அதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் அமெரிக்கா 18/1 ரன்கள் அடித்தது. ஆனால் அதைத் துரத்திய பாகிஸ்தான் 13/1 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று அமெரிக்கா சாதனை படைத்தது. மறுபுறம் உறுப்பு நாட்டு அணியிடம் டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக தோல்வியை சந்தித்து பாகிஸ்தான் அவமானத்தை சந்தித்தது.

- Advertisement -

பாகிஸ்தானின் அவமானம்:
இந்நிலையில் 1999 உலகக் கோப்பையில் வங்கதேசத்திடம் சந்தித்த தோல்வியை போன்ற அவமானத்தை இன்று பாகிஸ்தான் சந்தித்துள்ளதாக சோயப் அக்தர் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பாகிஸ்தானுக்கு பெரும் ஏமாற்றம். நல்ல துவக்கத்தை வழங்கவில்லை. அமெரிக்காவிடம் தோற்றது”

“1999 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக நாங்கள் செய்தது போல இன்று நாம் தேவையற்ற வரலாற்றை உருவாக்கியுள்ளோம். துரதிஷ்டவசமாக இன்றைய போட்டியில் பாகிஸ்தான் ஒரு போதும் வெற்றி பெற தகுதியற்ற அணியாக செயல்பட்டது. அதனாலேயே அமெரிக்கா அற்புதமாக விளையாடி ஆதிக்கத்தை பெற்றனர். அமீர், ஷாஹீன் ஆகியோர் முயற்சித்தனர். இருப்பினும் எங்களால் வெற்றியைத் தாண்ட முடியவில்லை” என்று கூறினார்.

- Advertisement -

அதே போல இது பாகிஸ்தான் கிரிக்கெட்டின் மிகப்பெரிய அவமான தோல்வி என்று முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கமரான் அக்மல் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சூப்பர் ஓவரில் தோல்வியை சந்தித்தது பாகிஸ்தான் கிரிக்கெட்டின் மிகப்பெரிய அவமானமாகும். நமக்கு இதை விட பெரிய அவமானம் இருக்க முடியாது”

இதையும் படிங்க: ரசிகரிடம் சண்டையிட்ட அசாம் கான்.. கொஞ்சமும் மாறாமல் பழைய காமெடியை நிகழ்த்திய பாகிஸ்தான் வீரர்கள்

“அமெரிக்கா அபாரமாக விளையாடியது. அவர்கள் கீழ் வரிசையில் உள்ள அணியாக உணரவில்லை. அவர்கள் ஐசிசி தரவரிசையில் பாகிஸ்தானுக்கு மேலே இருப்பது போல் நான் உணர்கிறேன். அந்தளவுக்கு அவர்கள் முதிர்ச்சி தன்மையை காட்டினர்” என்று கூறினார். இந்த நிலையில் பாகிஸ்தான் தங்களுடைய அடுத்த போட்டியில் பரம எதிரி இந்தியாவை ஜூன் ஒன்பதாம் தேதி எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement