“நீ எப்போதும் என்னுடன் தான் இருக்கிறாய்” தனது மகனுக்காக ஸ்பெஷல் பதிவை வெளியிட்ட – ஷிகர் தவான்

Dhawan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான் சமீப காலமாகவே இந்திய அணியில் இருந்து ஒதுக்கப்பட்டு வரும் வேளையில் மீண்டும் தனது இடத்தினை பிடிக்க தீவிரமாக போராடி வருகிறார். ஆனாலும் வயது மூப்பு மற்றும் பார்ம் அவுட் காரணமாக அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பு கடினமாகி உள்ளது.

இருப்பினும் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் அவர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 6 போட்டிகளில் இரண்டு வெற்றி மற்றும் நான்கு தோல்விகள் என நான்கு புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது.

இவ்வேளையில் ஏப்ரல் 18-ஆம் தேதி 33 வது ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது. புள்ளி பட்டியலில் ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் இருக்கும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இவ்வேளையில் ஷிகர் தவான் தனது மகனுக்காக வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது தன்னுடன் இல்லாமல் பிரிந்து இருக்கும் தனது மகனின் பெயரை பொறித்த ஜெர்சியுடன் இருக்கும் ஷிகர் தவான் அந்த ஜெர்சி அணிந்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு : “நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்.. மை பாய்” என ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : இந்த நிலைமையில் இருந்து எங்களால் மீண்டு வரமுடியும்.. ஒரு முடிவோட இருக்கோம் – ஆர்.சி.பி கோச் பேட்டி

அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு ஆயிஷா முகர்ஜி என்பவரை திருமணம் செய்து கொண்ட ஷிகர் தவான் கடந்த 2023-ஆம் ஆண்டு அவருடன் விவாகரத்து வாங்கி தனிமையில் வசித்து வரும் வேளையில் தனது மகனை காணாமல் தவித்து வருவதாக ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement