சையத் முஷ்டாக் அலி தொடரில் கலக்கிய தமிழக வீரர் ஷாருக் கானை 5.25 கோடிக்கு வாங்கிய அணி – எது தெரியுமா ?

Sharukh
- Advertisement -

இந்த ஆண்டு 14வது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து அணிகளும் போட்டிக்கு போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை வாங்கி வருகின்றனர். மேலும் இந்த ஏலத்தின் முடிவில் எந்தெந்த வீரர்கள் எந்த அணிக்கு செல்வார்கள் என்பதை பொறுத்தே அணியின் பலம் காணப்படும். அதனால் இந்த வருட ஐ.பி.எல் தொடரின் ஏலத்தினை கூட ரசிகர்கள் போட்டிகளை காண்பதை போல தற்போது மும்முரமாக கவனித்து வருகின்றனர்.

auction-1

அந்த வகையில் தற்போது நடைபெற்று முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்த தமிழக அதிரடி வீரர் ஷாருக்கான் 20 லட்சத்தில் அடிப்படை விலைக்கு ஏலத்தில் விடப்பட்டார். ஆனால் அவரை பஞ்சாப், டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் ஏலத்தில் எடுக்க மும்முரம் காட்டிய நிலையில் 20 லட்சத்தை அடிப்படையாகக் கொண்ட இவர் இறுதியில் 5.25 கோடிக்கு பஞ்சாப் அணியின் மூலம் ஏலம் எடுக்கப்பட்டார்.

- Advertisement -

நடைபெற்று முடிந்த சையத் முஸ்டாக் அலி தொடரின் இறுதிப் போட்டியில் 7 பந்துகளை சந்தித்து அவர் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 18 ரன்களை விளாசினார். அதுமட்டுமின்றி அந்த தொடர் முழுவதுமே 220 ஸ்ட்ரைக் ரேட் துடன் இறுதி நேரத்தில் இறங்கி போட்டிகளை மிகச் சிறப்பாக முடித்துக் கொடுத்தார். எனவே இவரை வாங்குவதற்கான போட்டி இம்முறை அதிகமாக காணப்பட்டது.

ஷாருக்கானை மூன்று அணிகளும் மாற்றி மாற்றி ஏலத்தில் கேட்க அவரது மதிப்பு எகிறியது. 20 லட்ச ரூபாயில் ஆரம்பித்த அவரது எலத்தின் மதிப்பு இறுதியில் 5.25 கோடிக்கு பஞ்சாப் அணி அவரை ஏலத்தில் தட்டி தூக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement