MS Dhoni : செய்த தவறுக்காக தோனியிடம் கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட சி.எஸ்.கே வீரர் – வீடியோ

msdhoni
- Advertisement -

நேற்று இரவு மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது 8 ஆவது ஓவரின் இறுதி பந்தை மும்பை அணி வீரர் தட்டிவிட அந்த பந்தை சென்னை அணி வீரர் ஷர்துல் தாக்கூர் கேர்லெஸ்ஸாக பீல்டிங் செய்ய அந்த பந்தினை கோட்டை விட்டார். இதனால் 1 ரன் வீணானது இதனை கண்ட தோனி கோவப்பட்டார். உடனே தாக்கூர் கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 15 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 59 ரன்களை குவித்தார்.

பிறகு 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி துவக்கத்திலேயே சரிவை கண்டது. ராயுடு மற்றும் வாட்சன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மேலும், பின்னால் வந்த வீரர்களும் வரிசையாக நடையை கட்ட சென்னை அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹார்டிக் பாண்டியா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

இதையும் படிக்கலாமே :

- Advertisement -

Mumbai Indians : இவர்களுக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. அவர்களுக்காக பெற்ற வெற்றியே இது – ரோஹித்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

Advertisement