இன்னும் என்ன பண்றீயோ போய் பண்ணு! மைதானத்திலேயே ரிஷப் பண்ட்டை விளாசிய கோச் ஷேன் வாட்சன்

Shane Watson Rishabh Pant
- Advertisement -

மிகுந்த பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற 34-வது லீக் போட்டியில் டெல்லியை சாய்த்த ராஜஸ்தான் வெறும் 15 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்து பங்கேற்ற 7 போட்டிகளில் 5-வது வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து 222/2 ரன்கள் விளாசி இந்த வருட ஐபிஎல் தொடரின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து அசத்தியது. அந்த அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜோஸ் பட்லர் மற்றும் தேவ்தூத் படிக்கள் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

ஆரம்பத்திலேயே அதிரடி காட்டிய அந்த ஜோடியில் படிக்கல் 54 (35) ரன்களை எடுத்து அவுட்டானாலும் மறுபுறம் பட்டையை கிளப்பிய ஜோஸ் பட்லர் 9 பவுண்டரி 9 சிக்சர் உட்பட இந்த வருடத்தின் 3-வது சதத்தை அடித்து 116 ரன்கள் விளாசினார். இறுதியில் கேப்டன் சஞ்சு சாம்சன் தனது பங்கிற்கு அதிரடியாக 5 பவுண்டரி 3 சிக்சருடன் 46* (19) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

டெல்லி போராடி தோல்வி:
அதை தொடர்ந்து 223 என்ற பெரிய இலக்கை துரத்திய டெல்லிக்கு தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் 28 (14) பிரித்வி ஷா 37 (27) என அதிரடியாக ரன்களை குவித்த போதிலும் சர்ப்ராஸ் கான் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். நடுவரிசையில் அதிரடி காட்டிய கேப்டன் ரிஷப் பண்ட் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 44 (24) ரன்களும் லலித் யாதவ் 37 (24) ரன்களும் எடுத்து வெற்றிக்காகப் போராடி ஆட்டமிழந்தனர். இருப்பினும் அடுத்து வந்த ஷார்துல் தாகூர் 10 (7) அக்சர் படேல் 1 (4) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்றதால் டெல்லியின் தோல்வி உறுதியானது.

இறுதியில் அதிரடியாக சிக்சர்களை பறக்கவிட்ட ரோவ்மன் போவல் 5 சிக்சருடன் 36 (15) ரன்கள் எடுத்த போதிலும் 20 ஓவர்களில் 208/7 ரன்களை மட்டுமே எடுத்த டெல்லி போராடி தோற்றது. இந்த தோல்வியால் பங்கேற்ற 7 போட்டிகளில் 4-வது தோல்வியை பதிவு செய்த டெல்லி 6-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

- Advertisement -

அத்துமீறிய ரிஷப் பண்ட்:
முன்னதாக இந்த போட்டியில் கடைசி ஓவரில் அம்பயர் நோபால் வழங்காதது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏனெனில் கடைசி ஓவரில் 36 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட போது அதை ஓபேத் மெக்காய் வீச முதல் 3 பந்துகளில் ரோவ்மன் போவல் அதிரடியாக ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்டார். அதில் 3-வது பந்தை புல் டாசாக வீசப்பட்ட நிலையில் அதை போவல் சிக்சர் அடித்த போதிலும் அந்த பந்து இடுப்புக்கு மேலே வந்தது. ஆனால் இடுப்புக்கு மேலே பந்து வந்ததை என்பதை தெளிவாக தெரிந்த அம்பயர் நோ பால் கொடுக்காதது ரசிகர்களையும் வர்ணனையாளர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.

அதுபோன்ற சமயத்தில் 3-வது அம்பயரையும் தொடர்பு கொள்ளாத களத்தில் இருந்த அவர் தனது முடிவில் விடாப்பிடியாக நின்றார். இதனால் கோபமடைந்த டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் களத்தில் இருந்த தனது அணி வீரர்களான ரோவ்மன் குல்தீப் யாதவ் ஆகியோரை பெவிலியனுக்கு அழைத்தார். அதே சமயத்தில் டெல்லியின் துணை பயிற்சியாளர் பர்வீன் ஆம்ரே களத்திற்குள் நுழைந்து அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும் டெல்லி வீரர்களை வெளியே அனுப்ப அம்பயர் மறுப்பு தெரிவித்ததால் எஞ்சிய போட்டி சர்ச்சைக்கு மத்தியில் நடந்து முடிந்தது.

- Advertisement -

ஆனால் கிரிக்கெட்டில் அம்பயர்களும் மனிதர்கள் என்பதால் அவர்கள் வழங்கும் தீர்ப்பு இறுதியானது என்ற விதிமுறை இருக்கும் நிலையில் அதை மதிக்காமல் ரிஷப் பண்ட் அத்துமீறியது பல ஜாம்பவான் வீரர்களையும் வல்லுநர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

அந்த பரபரப்பான தருணத்தின் போது டெல்லியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இல்லாத நிலையில் அத்துமீறிய ரிசப் பண்ட்டை “இன்னும் என்ன அராஜகம் பண்ணனுமோ போய் பண்ணு” என்பது போல் சைகை காட்டி மற்றொறு பயிற்சியாளர் ஷேன் வாட்சன் பேசியதால் ஒருவழியாக ரிஷப் பண்ட் அமைதியானார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தங்களது அணிக்கு அநீதி நடந்தாலும் போட்டியில் மேற்கொண்டு மிகப்பெரிய சர்ச்சை ஏற்படாமல் கட்டுப்படுத்திய ஷேன் வாட்சனை தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க : அநீதிக்கு அடங்கமாட்டோம் ! தல தோனி வழியில் அம்பயருக்கு எதிராக குரல் கொடுத்த பண்ட் – என்ன நடந்தது?

இது பற்றி போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு.”கடைசி ஓவரில் நடந்த அந்த நிகழ்வு எங்களுக்கு ஏமாற்றமே. இருப்பினும் அந்த மோசமான தருணத்திற்காக டெல்லி கேப்பிடல்ஸ் ஆதரவு கொடுக்கவில்லை. அம்பயரின் முடிவு சரியோ தவறோ நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். அதற்காக எங்கள் அணியில் இருந்து களத்திற்குள் ஒருவர் (பர்வின் ஆம்ரே) நுழைவது சரியானதல்ல” என்று ரிஷப் பண்ட் மற்றும் துணை பயிற்சியாளர் பர்வின் ஆம்ரே ஆகியோரை விளாசினார்.

Advertisement