அடிச்சி சொல்றேன். இந்த 2 டீம்ல ஒரு டீம் தான் உலககோப்பையை ஜெயிக்கும் – ஷேன் வார்ன் கணிப்பு

Warne
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ஆம் தேதி தொடங்கிய உலகக்கோப்பை தொடரானது தற்போது தகுதிச் சுற்று ஆட்டங்களை கடந்து சூப்பர் 12-சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அடுத்த நவம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடரானது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது. மேலும் இந்த தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது ? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனெனில் தற்போது உள்ள நிலைமையில் அனைத்து அணிகளும் சம பலத்துடன் உள்ளதால் நிச்சயம் இந்த கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது ? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது.

அந்த வகையில் இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற முக்கிய அணிகள் இந்த கோப்பையை கைப்பற்ற முனைப்பு காட்டும். மேலும் இதுகுறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை கூறி வர தற்போது ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்ன் இந்த டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்ற போகும் அணி குறித்த தனது கருத்தினை ட்விட்டர் வாயிலாக வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அவர் வெளியிட்டுள்ள அந்த கருத்தில் : இந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் நியூசிலாந்து அணி எப்போதுமே ஐசிசி தொடர்களில் சிறப்பாக விளையாடி வருவதால் அவர்களது ஆட்டமும் நன்றாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய அணியை அனைவரும் குறைத்து மதிப்பிடுவதாகவும் நிச்சயம் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவு மேட்ச் வின்னர்களை வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் இந்த தொடரில் எவ்வாறு விளையாடும் என்பதை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : பாண்டியாவும் இல்ல. பண்ட்டும் இல்ல. இந்திய அணியின் டேஞ்சரஸ் பேட்ஸ்மேன் இவர்தான் – வாசிம் அக்ரம் பேட்டி

அவர் கூறியது போலவே இந்திய அணி மற்றும் இங்கிலாந்து அணி பல மேட்ச் வின்னர்களை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாகவும் ரசிகர்கள் தங்களது கருத்தினை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement