கால் உடைஞ்சாலும் கடைசி வரை நிற்பேன்னு அவர்கிட்ட சொன்னேன்.. ஆஸியை வீழ்த்திய ஆட்டநாயகன் பேட்டி

Shamar Joseph
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த டெஸ்ட் தொடரை 1 – 1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் சமன் செய்து அசத்தியது. குறிப்பாக முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியாவை காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த வெஸ்ட் இண்டீஸ் கோப்பையை பகிர்ந்து கொண்டது.

இந்த வெற்றியால் 27 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலிய மண்ணிலும் 35 வருடங்கள் கழித்து காபா மைதானத்திலும் வென்று வெஸ்ட் இண்டீஸ் மாபெரும் சாதனை படைத்துள்ளது. சமீப காலங்களில் கத்துக்குட்டியாக தடுமாறி வரும் வெஸ்ட் இண்டீஸ் தற்போது உலகின் நம்பர் ஒன் அணியாகவும் டெஸ்ட் சாம்பியனாகவும் இருக்கும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

- Advertisement -

கால் உடைஞ்சாலும்:
இந்த வெற்றிக்கு மொத்தம் 8 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய சமர் ஜோசப் ஆட்டநாயகன் விருதை வென்றார். சொல்லப்போனால் இந்த தொடரில் அறிமுகமாகி 24 வயதிலேயே அபாரமாக செயல்பட்டு 2 போட்டிகளில் மொத்தம் 13 விக்கெட்டுகள் எடுத்த அவர் தொடர்நாயகன் விருதையும் தட்டி சென்றார். அதை விட இப்போட்டியில் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த அவருடைய பாதத்தை ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க் துல்லியமான யார்க்கர் பந்தை வீசி உடைத்தார்.

அதனால் வலியால் துடித்த அவர் மேற்கொண்டு பேட்டிங் செய்ய முடியாமல் பாதியிலேயே வெளியேறினார். அதன் காரணமாக முக்கியமான 2வது இன்னிங்ஸில் விளையாடுவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் முதலுதவிகளை மட்டும் எடுத்துக்கொண்டு அட்டகாசமாக பந்து வீசி 7 விக்கெட்டுகளை சாய்த்து காபா மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற உதவினார்.

- Advertisement -

இந்நிலையில் எதிரணியின் கடைசி விக்கெட் விழும் வரை பந்து வீசி போராடத் தயார் என்று கேப்டனிடம் தெரிவித்ததாக சமர் ஜோசப் கூறியுள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய அணி வீரர்கள் கொடுத்த ஆதரவுக்கு பாராட்டுக்கள். இன்று என்னால் மைதானத்திற்கு கூட வர முடியாத நிலைமை இருந்தது. ஆனால் என்னுடைய பாதத்தில் ஏதோ செய்து நடக்க வைத்த டாக்டருக்கு நன்றி”

இதையும் படிங்க: இந்த பவர் போதுமா? முன்னாள் ஆஸி வீரர் கலாய்த்ததால் பற்றிய நெருப்பு.. வெ.இ கேப்டன் பதிலடி

“விக்கெட்கள் எடுக்க எடுக்க எங்களுக்கு நேர்முறையான எண்ணங்கள் வந்தது. 1 – 1 என்ற கணக்கில் சமன் செய்ததே தொடரை வென்றது போன்ற உணர்வை கொடுக்கிறது. என்னுடைய கண்களில் கண்ணீர் வருகிறது. ஆனால் 5 விக்கெட்டுகள் எடுத்த போதே நான் அழுது விட்டேன். இது கடினம் என்றாலும் என்னுடைய அணிக்காக செய்தேன். இன்றைய நாள் துவக்கத்தில் எதிரணியின் கடைசி விக்கெட் கிடைக்கும் வரை என்னுடைய பாதம் எப்படி இருந்தாலும் நான் பந்து வீச தயார் என்று கேப்டனிடம் சொன்னேன். அவருக்காக அதை செய்த நான் தற்போது பெருமையடைகிறேன்” என்று கூறினார்.

Advertisement