IPL 2023 : ஷ்ரேயாஸ் ஐயரை தொடர்ந்து கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறிய மற்றொரு நட்சத்திர வீரர் – அதிகாரபூர்வ தகவல்

KKR
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய நடப்பு 16-வது ஐபிஎல் தொடரானது மே 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடர் துவங்குவதற்கு முன்னதாக வலுவான அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தற்போது அடி மேல் அடி விழுந்து வருகிறது. ஏனெனில் கொல்கத்தா அணியில் பல நட்சத்திர வீரர்கள் இந்த ஐ.பி.எல் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

RR vs KKR Sanju Samson Shreyas Iyer

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே இந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயம் அடைந்த கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தனது காயத்திற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்காக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் வெளியேறியதற்கு பதிலாக தற்போது நிதீஷ் ராணாவின் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது.

அப்படி தாங்கள் விளையாடிய முதல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த கொல்கத்தா அடுத்த போட்டியில் விளையாட தயாராகி வருகிறது. இந்நிலையில் தற்போது மேலும் அந்த அணிக்கு ஒரு பின்னடைவாக வங்கதேச அணியை சேர்ந்த அனுபவ ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் இந்த ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார் என்ற அதிகாரவபூர்வ தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தந்துள்ளது.

Shakib

ஏனெனில் பந்துவீச்சில் அசத்தும் அவர் பேட்டிங்கிலும் களமிறங்கி அற்புதமாக விளையாட கூடியவர். ஏற்கனவே கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டர் தற்போது சிரமப்பட்டு வரும் வேளையில் நிச்சயம் அவரது வருகை கொல்கத்தா அணிக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது வெளியான தகவலின் படி அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அதன்படி வெளியாகியுள்ள தகவலில் : ஷாகிப் அல் ஹசன் இன்டர்நேஷனல் போட்டிகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளதாகவும் அதன் காரணமாக அந்த அணி நிர்வாகத்திடம் முறையாக மன்னிப்பு கேட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது. அதேபோன்று கொல்கத்தா அணியில் இடம் பிடித்திருந்த மற்றொரு வங்கதேச வீரரான லிட்டன் தாசும் குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவார் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : DC vs GT : போராடிய டெல்லி, கேன் வில்லியம்சன் இடத்தில் க்ளாஸ் காட்டிய இளம் வீரர் – தமிழக வீரர்களால் குஜராத் வென்றது எப்படி

ஏனெனில் வங்கதேச அணி அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின்னர் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் மே 1-ஆம் தேதி வரை தான் லிட்டன் தாஸ் ஐ.பி.எல் தொடரில் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement