இந்தியா எல்லா மேட்ச்சுலையும் அதை செஞ்சு அசத்துறாங்க.. நீங்க ஏன் சோம்பேறியா இருக்கீங்க? பாக் அணியை விமர்சித்த ஷாஹித் அப்ரிடி

Shahid Afridi
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஷாஹின் அப்ரிடி, ஹரிஷ் ரவூப், நசீம் ஷா போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை கொண்டிருப்பதால் பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் நேபாளை மட்டுமே தோற்கடித்த அந்த அணி சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளிடம் தோல்வியை சந்தித்து வெளியேறியது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. குறிப்பாக பரம எதிரி இந்தியாவுக்கு எதிராக 228 ரன்கள் வித்தியாசத்தில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது பாகிஸ்தான் ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது.

அதனால் இந்தத் தொடரில் வெற்றி வாகை சூடி விரைவில் நடைபெறும் 2023 உலகக் கோப்பையிலும் காலம் காலமாக சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தி இந்தியாவை தங்களது அணி தோற்கடிக்கும் என்று ஆவலுடன் காத்திருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். இந்நிலையில் இத்தொடரின் முக்கியமான போட்டிகளில் ஒரு விக்கெட் எடுக்காமல் சுமாராக செயல்பட்ட துணை கேப்டன் ஷடாப் கானை நீக்கி விட்டு பெஞ்சில் வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன் என்று பாகிஸ்தான் அணி நிர்வாகத்தை ஷாஹித் அப்ரிடி விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இந்தியாவை பாருங்க:
குறிப்பாக ஒவ்வொரு போட்டியிலும் இந்தியா ஏதோ ஒரு மாற்றங்களை செய்து வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக பாராட்டும் அவர் அதில் பாதியளவு கூட பாகிஸ்தான் மாற்றங்களை செய்து தேவையான வீரர்களை கண்டறியவில்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

“இது பழைய கதையாக இருக்கிறது. இதே ஆசிய கோப்பையில் விளையாடும் இந்தியா கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியிலும் மாற்றங்களை செய்வதை நான் பார்த்தேன். அதாவது அவர்கள் சீனியர்களுக்கு ஓய்வு கொடுத்து உலகக்கோப்பையில் விளையாடப் போகும் ஜூனியர்களுக்கு வாய்ப்பளித்தனர். இது போன்ற முடிவுகள் மிக முக்கியமாகும். ஏனெனில் பெஞ்சில் இருப்பவர்களும் விளையாடும் 11 பேர் அணியில் இருப்பவர்களுக்கு நிகரானவர்களாக இருக்க வேண்டும்”

- Advertisement -

“அதனால் நீங்கள் உங்களுடைய முதன்மை வீரர்களுக்கு ஓய்வு கொடுப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஒருவேளை சடாப் கான் ஓய்வெடுத்தால் ஒசாமா மிர் விளையாடலாம். பாகிஸ்தானுக்காக அவர் சமீப காலங்களில் விளையாட முழுமையாக தயாராகியுள்ளார். எனவே ஏதேனும் சில வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை எனில் அவர்களுக்கு நீங்கள் ஓய்வு கொடுக்கலாம். அதற்காக அவர்களை 15 பேர் அணியில் நீக்க சொல்லவில்லை ஓய்வு கொடுங்கள் என்று சொல்கிறேன்”

இதையும் படிங்க: இறுதிப்போட்டிக்கு முன்னதாக திடீரென டீமில் வெளியேறிய இந்திய வீரர் – மாற்று வீரராக தமிழக வீரர் சேர்ப்பு

“அவர்களிடம் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் பேச வேண்டும். அதை செய்யாத பாகிஸ்தான் அணியில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை” என கூறினார். இதைத்தொடர்ந்து அடுத்ததாக இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் தங்களுடைய முதல் போட்டியில் அக்டோபர் 6ஆம் தேதி நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement