ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக என்னோட கேம் பிளான் இது தான் – ஷாஹீன் அப்ரிடி மறைமுக எச்சரிக்கை

- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 2ஆம் தேதி ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. விரைவில் நடைபெறும் 2023 உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக நடைபெறும் இத்தொடரில் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு இரு நாட்டு ரசிகர்களிடமும் காணப்படுகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தானைச் சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சாஹின் அப்ரிடி இந்தியா பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பொதுவாகவே வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக புதிய பந்தை ஸ்விங் செய்து இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய சவாலை கொடுப்பார்கள்.

மறுபுறம் 2017 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல் முதல் 2019 உலகக்கோப்பை செமி ஃபைனல் வரை முக்கியமான போட்டிகளில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரோகித் சர்மா, ராகுல் போன்ற இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக செயல்பட்டுள்ளார்கள். சொல்லப்போனால் 2021 டி20 உலகக் கோப்பையில் ரோஹித், ராகுல் ஆகியோரை பவர் பிளே ஓவர்களில் ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்த ஷாஹின் அப்ரிடி வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை முதல் முறையாக பாகிஸ்தான் தோற்கடிப்பதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

அப்ரிடியின் கேம் பிளான்:
அந்த நிலையில் தற்போதைய அணியில் ரோஹித், கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் என டாப் 4 பேட்ஸ்மேன்களும் வலது கை வீரர்களாக இருக்கின்றனர். எனவே முதல் 10 ஓவர்களில் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு சாகின் அப்ரிடி புதிய பந்தை ஸ்விங் செய்து மிகப்பெரிய சவாலை கொடுப்பார் என்று சந்தேகமின்றி நம்பலாம். அதன் காரணமாக பவர் பிளே ஓவர்களில் அவருக்கு எதிராக தாக்குப் பிடித்தால் மட்டுமே இந்தியா வெல்ல முடியும் என்ற நிலைமை இருக்கிறது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் புதிய பந்தை பயன்படுத்தி பவர் பிளே ஓவர்களில் ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகிய ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை விரைவாக காலி செய்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை கொண்டு வர வைப்பதே தம்முடைய திட்டம் என ஷாஹின் அப்ரிடி கூறியுள்ளார். அதாவது ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை விட புதிய பந்தை எதிர்கொள்வதற்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிக சிரமப்பட்டு எளிதாக அவுட்டாகி விடுவார்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்தில் பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

இதையும் படிங்க: என்னது பதிரானா மலிங்காவின் ஸ்டைலை காப்பி பண்றாரா? அவரோட விஷயமே வேற – சிறுவயது கோச் பேட்டி

“என்னுடைய போட்டியின் திட்டம் மிகவும் எளிதானது. அதை அனைத்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்களும் அறிவார்கள். என்னுடைய இலக்கு என்னவெனில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை விரைவாக அவுட்டாக்கி எதிரணியின் மிடில் ஆர்டர் மீது அதிகப்படியான அழுத்தத்தை போட வேண்டும். ஏனெனில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை போல் அல்லாமல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எப்போதுமே புதிய பந்துக்கு எதிராக சிறப்பாக விளையாட தடுமாறுவார்கள். எனவே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் புதிய பந்தை எதிர்கொள்வதற்கு அதிக அழுத்தத்தை சந்திக்கும் நிலையை உருவாக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement