ஒருவேளை இருக்குமோ? களத்தில் சுப்மன் கில்லுக்கு ஆதரவாக சாரா டெண்டுல்கர் செய்த செயலால் – சந்தேகத்தை கிளப்பும் ரசிகர்கள்

Sara-Tendulkar
- Advertisement -

சமீப காலமாகவே இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் மற்றும் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் மகன் சாரா டெண்டுல்கர் காதலில் இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. அதோடு சாரா எந்த புகைப்படத்தில் பகிர்ந்தாலும் அதே இடத்தில் இருக்கும் படி சுப்மன் கில்லின் புகைப்படமும் வெளியாகி இணையத்தில் வைரலானதால் அவர்கள் இருவரும் காதலித்து வருகின்றனர் என்று கூட செய்திகள் அடிக்கடி இணையத்தில் வலம் வந்தன.

அதோடு சாரா டெண்டுல்கருடன் டேட்டிங் செய்வது குறித்தும் சுப்மன் கில் சில கருத்துக்களை பகிர்ந்து இருந்தது இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் டெங்கு காய்ச்சல் காரணமாக பங்கேற்காத சுப்மன் கில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அகமதாபாத் நகரில் நடைபெற்ற போட்டியில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து நேற்று வங்கதேச அணிக்கு எதிராக நேற்று அக்டோபர் 19-ஆம் தேதி புனே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் உலககோப்பை போட்டிகளில் தனது முதல் அரை சதத்தை அடித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில் சுப்மன் கில் பங்கேற்று விளையாடி இருந்த இந்த போட்டியை காண மும்பையில் இருந்து சாரா டெண்டுல்கர் புனே நகருக்கு வந்தடைந்து மைதானத்தில் நேரில் அவருக்கு ஆதரவளித்தது தற்போது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பிள்ளது. ஏனெனில் மும்பையில் குடியிருக்கும் சாரா வழக்கமாகவே ஐபிஎல் போட்டிகளின் போது மும்பை அணிக்காக நேரில் வந்து ஆதரவினை தருவார்.

- Advertisement -

ஆனால் இப்பொழுது சுப்மன் கில்லை பார்ப்பதற்காகவே அவர் புனே வரை வந்து போட்டியின் போது இந்திய அணியை ஆதரித்தது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் சுப்மன் கில் அரை சதம் அடித்த போதும் சிரித்தபடி கைத்தட்டி அவரை ஆதரித்த அவர் அதோடு கையில் மோதிரம் மாட்டும் படியும் அவர் சைகை செய்ததால் அவர்கள் இருவருக்கும் காதல் இருக்குமோ? என்று ரசிகர்கள் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர்.

இதையும் படிங்க : அதை அடிச்சக்கவே முடியாது.. அவர் தான் ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர்.. ரோஹித் சர்மா வெளிப்படை

மேலும் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் இதேபோன்று பிரபலங்களை காதலித்து திருமணம் செய்து வரும் வேளையில் சுப்மன் கில்லும் அதேபோன்று காதலில் இணைய உள்ளாரா? என்றும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால் இந்த விவகாரம் குறித்து சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் ஆகிய இருவருமே எந்தவொரு பதிலையும் வெளிப்படையாக தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.

Advertisement