லாஸ்ட் 3-4 வருஷமா இதுதான் நடக்குது.. பஞ்சாப் அணிக்கெதிரான த்ரில் வெற்றி குறித்து – சஞ்சு சாம்சன் பேட்டி

Samson
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டியானது நேற்று சண்டிகர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

அதனைத் தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக அஷுதோஷ் சர்மா 31 ரன்களையும், ஜிதேஷ் சர்மா 29 ரன்களையும் குவித்தனர். ராஜஸ்தான் அணி சார்பாக ஆவேஷ் கான் மற்றும் கேஷவ் மகாராஜ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை குவித்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 39 ரன்களையும், ஹெட்மயர் 27 ரன்களையும் குதித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பின்னர் தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : கடந்த ஆண்டும் சரி இந்த ஆண்டும் சரி சில சுவாரஸ்யமான முடிவுகள் எங்களுக்கு கிடைத்துள்ளன. இருப்பினும் இந்த இலக்கை எட்டிப் பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. கடைசி ஓவரில் பாஸ்ட் பவுலர் வந்தால் நிச்சயம் இலக்கை எட்ட முடியும் என்று நினைத்துக் கொண்டே இருந்தோம்.

- Advertisement -

அந்த வகையில் ஷிம்ரன் ஹெட்மயர் இந்த போட்டியை முடித்து கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி. கடந்த மூன்று – நான்கு ஆண்டுகளாகவே பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி இதேபோன்று சுவாரசியமான முடிவுகளை தான் பெற்றிருக்கிறது. ஹெட்மயர் கடந்த பல ஆண்டுகளாகவே எங்கள் அணிக்காக இதே போன்று பல போட்டிகளை முடித்துக் கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க : மேற்கு இந்தியர்கள்ன்னா சும்மாவா.. இதான் முக்கியம்.. தோணும் போது சான்ஸ் கொடுங்க.. ரோவ்மன் போவல் பேட்டி

அனுபவம் நிறைந்த அவர் போட்டியை ஃபினிஷிங் செய்து கொடுப்பதில் தனது திறனை மென்மேலும் வளர்த்துள்ளார். இதேபோன்று பலமுறை அவர் எங்களுக்காக போட்டிகளை வெற்றி பெற்று கொடுத்துள்ளார். ராவ்மன் பவல் மற்றும் ஹெட்மயர் ஆகியோர் எங்களது அணியுடன் இருப்பது நன்றாக இருக்கிறது என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement