அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்கு வரும் சஞ்சு சாம்சன்.. மேலும் கூடுதலாக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரும் வருகை – சி.எஸ்.கே பிளான்

Samson and CSK
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கின்றது. இனிவரும் எஞ்சிய ஐந்து போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு செல்வது உறுதி கிடையாது. எனவே இனிவரும் ஆட்டங்கள் அனைத்தும் சம்பிரதாய ஆட்டங்கள் மட்டும் தான்.

அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணியில் ஏற்படவுள்ள மாற்றம் :

இப்படி இந்த ஆண்டு சிஎஸ்கே அணி மிகப்பெரிய சரிவை சந்தித்ததற்கு அந்த அணியால் ஏலத்தில் வாங்கப்பட்ட எந்த ஒரு வீரரும் பெரிய அளவில் சோபிக்காதது மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. அதோடு டி20 போட்டிகள் தற்போது அதிரடியாக மாறிவரும் வேளையில் அந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து விளையாடும் எந்த ஒரு பேட்ஸ்மேனும் சென்னை அணியால் வாங்கப்படவில்லை என்பதும் இந்த தொடரில் வெளிப்படையாகவே தெரிகிறது.

- Advertisement -

இதன் காரணமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது சென்னை அணியில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான சென்னை அணியில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டரான கேமரூன் க்ரீன் ஆகியோர் சென்னை அணியால் மினி ஏலத்தின் போது வாங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏனெனில் தற்போதைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இருப்பவர் ரியான் பராக்கின் நெருங்கிய உறவினர். அதன் காரணமாகவே தற்போதைய ராஜஸ்தான் அணியை ரியான் பராக் கேப்டனாக வழிநடத்தி வருவதாகவும், மேலும் அவரது உறவினராலே ராகுல் டிராவிட் அந்த அணியின் தலைமை பொறுப்பு கொண்டு வரப்பட்டதாகவும் சில தகவல்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது அதிருப்தியில் இருக்கும் சஞ்சு சாம்சன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறி மினி ஏலத்தில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. அப்படி மினி ஏலத்தில் பங்கேற்கும் சஞ்சு சாம்சனை சென்னை அணி எவ்வளவு தொகை கொடுத்தாலும் எடுக்கும் முனைப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : திறமை மட்டும் போதாது.. சச்சின், கோலி மாதிரி சூர்யவன்சி சூப்பர்ஸ்டாராக இதை செய்யனும்.. மதன் லால்

அதேபோன்று கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் காயம் காரணமாக தனது பெயரை பதிவிடாத கேமரூன் கிரீன் அடுத்த மினி ஏலத்தில் தனது பெயரை பதிவிடுவார் என்பதனால் அதிரடி ஆல்ரவுண்டரான அவரையும் வாங்கும் முனைப்புடன் சி.எஸ்.கே அணி காத்திருக்கிறது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு மினி ஏலத்தில் இவர்கள் இருவரையும் அணிக்குள் கொண்டு வந்து தங்களது பிளேயிங் லெவனை பலப்படுத்தும் திட்டத்துடன் சிஎஸ்கே அணியின் நிர்வாகத்தினர் தற்போது செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement