இந்தியாவில் துவங்கிய 14-வது ஐபிஎல் தொடரானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் சில தினங்களில் லீக் சுற்றுகள் முடிவடைந்து பிளே ஆப் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த இறுதி கட்டத்தில் அனைத்து அணிகளும் பிளே ஆப் சுற்றில் இடம் பிடிப்பதற்காக தற்போது கடுமையாக போட்டி போட்டு வருகின்றன. இந்த தொடரில் பல ஐபிஎல் அணிகளை சேர்ந்த பல இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக ஒவ்வொரு அணியிலும் ஒருசில இளம் வீரர்கள் தங்களது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சென்னை அணியை பொறுத்தவரை ருதுராஜ் கெய்க்வாட், பஞ்சாப் அணியை பொறுத்தவரை ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் அதேபோன்று பெங்களூரைச் சேர்ந்த ஹர்ஷல் பட்டேல் என பலரும் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கொல்கத்தா அணியை சேர்ந்த இளம் வீரர் ஒருவர் நிச்சயம் அடுத்த ஐபிஎல் ஏலத்தில் 12 கோடி முதல் 14 கோடி வரை ஏலம் போவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் பங்கேற்கும் என்றும் அதற்கு முன்னர் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில் புதிய வீரர்கள் கலந்து கொள்வது மட்டுமின்றி நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய பல இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என்று தெரிகிறது. அந்த வகையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியதாவது : என்னை பொறுத்தவரை கொல்கத்தா அணியை சேர்ந்த இளம் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் நிச்சயம் அடுத்த ஐபிஎல் ஏலத்தில் 12 முதல் 14 கோடி வரை ஏலம் போவார்.
ஏனெனில் அவரது பேட்டிங் ஏதோ ப்ளுக்கில் வந்தது கிடையாது. அவரது முதல் தர கிரிக்கெட்டை பார்த்தாலும் அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பது தெரிகிறது. பேட்டிங்கில் அதிரடி காண்பிக்கும் வெங்கடேஷ் ஐயர் பவுலிங்கிலும் அசத்தலாக பந்து வீசி வருகிறார். நிச்சயம் பவுலிங்கிலும் அவர் சிறப்பான செயல் பாட்டினை வெளிப்படுத்தி அசத்துவார் என்பதை நம்பலாம்.
இதையும் படிங்க : பி.சி.சி.ஐ இவருக்கு ட்ரைனிங் கொடுத்தா வேற லெவல்ல விளையாடுவாரு – இளம்வீரருக்கு சப்போர்ட் செய்த சேவாக்
எனவே நிச்சயம் அடுத்த ஐபிஎல் ஏலத்தில் வெங்கடேஷ் ஐயர் 12 முதல் 14 கோடி வரை ஏலம் போவார் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். இந்த ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் கொல்கத்தா அணிக்காக அறிமுகமாகிய வெங்கடேஷ் ஐயர் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி 144 ஸ்ட்ரைக் ரேட் உடன் 126 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.