சென்டிமெண்டுக்கே இடமில்லை.. இனிமேல் தான் ஆட்டத்தை பாப்பீங்க.. ரோஹித் கேப்டன்ஷிப் பற்றி சஞ்சய் மஞ்ரேக்கர் அதிரடி

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஐபிஎல் 2024 தொடரிலிருந்து ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது நிறைய ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஜாம்பவான் சச்சின் தலைமையில் முதல் கோப்பையை வெல்வதற்கே திண்டாடி வந்த மும்பை 2013இல் ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

அப்படியே 2020க்குள் அனைத்து வீரர்களின் சிறப்பாக வழி நடத்தி மொத்தம் 5 கோப்பைகளை வென்ற ரோகித் சர்மா குறுகிய காலத்திலேயே மும்பையை வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க வைத்தார். அதன் காரணமாக இந்தியாவின் கேப்டனாகவும் முன்னேறிய அவர் 2023 உலகக் கோப்பையில் ஃபைனல் வரை அழைத்துச் சென்று நன்றாகவே செயல்பட்டார்.

- Advertisement -

செண்டிமெண்ட்டுக்கு வேலையில்ல:
அப்படிப்பட்ட சூழ்நிலையில் ரோகித் சர்மா வளர்த்த பாண்டியா தலைமையில் அவர் விளையாடுவதை பார்க்க விரும்பாத ரசிகர்கள் மும்பை அணியின் இந்த முடிவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக ரோகித் சர்மா பதவி நீக்கப்பட்ட ஒரே நாளில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் மும்பை அணியை ஃபாலோ செய்வதை நிறுத்தி உச்சகட்ட எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விஷயத்தில் ரசிகர்கள் செண்டிமெண்ட் பார்ப்பதற்கு எந்த அவசியமும் இல்லை என முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் இந்த முடிவால் கேப்டன்ஷிப் அழுத்தம் இல்லாமல் ரோகித் சர்மா சுதந்திரமாக விளையாடுவதை ரசிகர்களால் பார்க்க முடியும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இதற்காக யாரும் ரோஹித் சர்மாவை பற்றி சென்டிமென்ட்டாகவோ அல்லது உணர்ச்சிகரமாகவோ நினைக்கக்கூடாது. இது சரியான முடிவு என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில் கேப்டனாக தம்மை நிரூபித்துள்ள ஹர்திக் பாண்டியா நன்றாக செயல்பட்டு வருகிறார். எனவே உங்களுக்கு தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் டி20 கேப்டன் மற்றும் வீரர் கிடைத்துள்ளார். மறுபுறம் ரோஹித் சர்மா நீண்ட காலமாக மும்பை அணியில் இருந்து வருகிறார்”

இதையும் படிங்க: 2 வருசமா எதுவும் சரில்ல.. ஓஞ்சு போய்ட்டாரு.. ரோஹித் சர்மா பதவி நீக்கம் பற்றி சுனில் கவாஸ்கர் கருத்து

“எனவே ஹர்திக் பாண்டியா போன்ற ஒருவரை கொண்டிருப்பது கிரிக்கெட்டை அர்த்தப்படுத்துகிறது. இந்த சமயத்தில் பாண்டியா அழுத்தத்தை உணர மாட்டார் என்று நம்புகிறேன். ஏனெனில் அவருக்கு மும்பை நிர்வாகம் நிறைய ஆதரவு கொடுக்கிறது” என்று கூறினார். இதைத்தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பையிலும் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக பாண்டியா இந்தியாவின் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement