ஐ.சி.சி 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்ற இந்த 2 அணிகளுக்கே வாய்ப்பு – சங்கக்காரா கணிப்பு

Sangakkara
- Advertisement -

இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி துவங்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் பத்து நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. இந்நிலையில் இந்த தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

அதே வேளையில் இந்த உலகக் கோப்பை தொடரில் எந்த அணிகள் சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்பு இருக்கிறது? என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்ககாரா எதிர்வரும் இந்த உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள இரண்டு அணிகள் குறித்த தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்.

ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர்கள் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதோடு தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை தொடரிலும் இந்திய அணியினர் சிறப்பாக செயல்பட்டு வருவதால் உலகக் கோப்பை தொடரிலும் சாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

அதோடு தற்போதுள்ள இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் இளம் திறமைசாலிகள் என சரியான கலவையில் அணி அமைந்துள்ளதால் சொந்த மைதானத்தில் கோப்பையை கைப்பற்ற இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : அதேபோன்று இந்திய அணிக்கு அடுத்து இங்கிலாந்து அணிக்கு அதிகப்படியான வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க : IND vs SL : ஃபைனலில் மழை வருமா? போட்டி ரத்தானால் கோப்பை யாருக்கு? வெதர் ரிப்போர்ட்.. ரூல்ஸ் கூறுவது இதோ

ஏனென்றால் ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியினர் தொடர்ச்சியான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சமீபத்திய தொடர்களில் கூட மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வரும் வேளையில் இந்தியாவில் நடக்கும் இந்த உலகக் கோப்பை தொடரிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement