நல்லா ட்ரை பண்ணி இப்படி தோத்தது கஷ்டமா இருக்கு.. தோல்விக்கு இதுதான் காரணம் – சாம் கரண் பேட்டி

Sam-Curran
- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று சண்டிகர் நகரில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டியில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது ராஜஸ்தான் அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஆனாலும் இந்த போட்டியின் இறுதி ஓவரின் ஐந்தாவது பந்து வரை வெற்றிக்காக போராடிய பஞ்சாப் அணியின் செயல்பாடு ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக அஷுதோஷ் சர்மா 31 ரன்களையும், ஜிதேஷ் சர்மா 29 ரன்களையும் குவித்து அசத்தினர். ராஜஸ்தான் அணி சார்பாக ஆவேஷ் கான் மற்றும் கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 39 ரன்களையும், ஹெட்மயர் 27 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் கூறுகையில் : இந்த மைதானம் சற்று மெதுவாக இருந்தது. பேட்டிங்கில் நாங்கள் சிறப்பான துவக்கத்தை பெற தவறி விட்டோம். அதோடு முடிவிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இருந்தாலும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக விளையாடி இருந்தனர்.

- Advertisement -

150 ரன்கள் வரை நெருக்கமாக சென்றது உண்மையிலேயே அற்புதமான ஒன்றுதான். அதேபோன்று பந்துவீச்சிலும் நாங்கள் சரியாக செயல்பட்டோம். சரியான நேரத்தில் விக்கெட்டுகளும் கிடைத்தது. ஆனாலும் எதிர்பாரா விதமாக இறுதிவரை சென்று நாங்கள் இப்படி தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது.

இதையும் படிங்க : லாஸ்ட் 3-4 வருஷமா இதுதான் நடக்குது.. பஞ்சாப் அணிக்கெதிரான த்ரில் வெற்றி குறித்து – சஞ்சு சாம்சன் பேட்டி

எங்களுடைய திட்டம், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்தும் சிறப்பாக இருந்தும் இறுதியில் ஒரு நெருக்கமான தோல்வி வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் நாங்கள் இந்த தோல்வியில் இருந்து வலுவாக மீண்டு வர முடியும். அடுத்தடுத்து இப்படி நெருக்கமான தோல்விகளை சந்தித்து வந்தாலும் எங்களது அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என சாம் கரண் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement