இப்படி ஒரு ஆட்டத்தை ஆடி கடைசில நாங்க தோத்தது ரொம்பவே கஷ்டமா இருக்கு – சாம் கரண் வருத்தம்

Sam-Curran
- Advertisement -

சண்டிகார் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது அந்த அணியை சொந்த மண்ணில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை வசித்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை அணி துவக்கத்திலேயே இஷான் கிஷன் விக்கெட்டை இழந்து இருந்தாலும் ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரது சிறப்பான ஆட்டம் நல்ல அடித்தளம் அமைத்தது. பின்னர் திலக் வர்மா, டிம் டேவிட் ஆகியோரது அதிரடியான ஆட்டம் காரணமாக மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் குவித்து 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்திருந்தாலும் ஷஷாங்க் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா ஆகியோரது ஆட்டம் பிரமாதமாக இருந்தது.

அவர்களது இந்த போராட்டம் ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் கூறுகையில் : மேலும் ஒரு போட்டியை நெருங்கி வந்து தோற்றுள்ளோம். இந்த ஆட்டம் மிக நெருக்கமாக வந்தது. ஆனாலும் இறுதியில் நாங்கள் தோல்வியை தழுவியது வருத்தம் அளிக்கிறது.

- Advertisement -

அஷுதோஷ் சர்மாவின் ஆட்டம் இந்த போட்டியிலும் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பாக இருந்தது. உண்மையிலேயே இந்த தோல்வி எங்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. இது போன்ற க்ளோஸ் கேம்களில் தோல்வியை சந்தித்தால் அதை ஏற்றுக்கொள்ள நேரம் பிடிக்கும். ஷஷாங்க் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா ஆகியோர் முழு அர்ப்பணிப்புடன் போராடினர். அவர்களது நம்பிக்கை நம்ப முடியாத வகையில் இருந்தது.

இதையும் படிங்க : நாங்க இந்த போட்டியில் ஜெயிச்சிருந்தாலும் அந்த பஞ்சாப் பிளேயர் ஆடுன ஆட்டம் இருக்கே – வியந்து பாராட்டிய பாண்டியா

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கூட அஷுதோஷ் சர்மா ஸ்வீப் ஷாட்டுகளின் மூலம் பெரிய பெரிய சிக்ஸர்களை அடிக்கிறார். அவரது ஆட்டத்தை பார்க்க நன்றாக இருக்கிறது. இருந்தாலும் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்ததில் வருத்தமே. எங்களது அணியில் உள்ள சில குறைகளை நீக்கிவிட்டு நாங்கள் தேவையான இடத்தில் எங்களை பலப்படுத்திக் கொண்டால் நிச்சயம் வெற்றி பாதிக்கு திரும்ப முடியும் என சாம் கரண் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement