நாங்க இந்த போட்டியில் ஜெயிச்சிருந்தாலும் அந்த பஞ்சாப் பிளேயர் ஆடுன ஆட்டம் இருக்கே – வியந்து பாராட்டிய பாண்டியா

Pandya
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் போட்டியானது நேற்று சண்டிகர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 78 ரன்களையும், கேப்டன் ரோகித் சர்மா 36 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய மும்பை இந்தியனஸ் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டி மிகச் சிறப்பாக இருந்தது. எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களின் உள்ளுணர்வும் இந்த போட்டியின் போது சோதிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த போட்டி நடக்கும் முன்னரே நாங்கள் இந்த போட்டியில் பதட்டமான சூழ்நிலை ஏற்படலாம் அதனை சமாளிக்க தயாராகுங்கள் என்று பேசி இருந்தோம். அந்த வகையில் இந்த போட்டியின் போது ஆட்டம் கடைசி வரை பரபரப்பாக சென்றது. ஐபிஎல் தொடரானது இதே போன்ற பல சுவாரசியமான போட்டிகளை வழங்கியுள்ளது. பஞ்சாப் அணி சார்பாக களமிறங்கிய இளம் அதிரடி ஆட்டக்காரரான அஷுதோஷ் சர்மா விளையாடிய விதம் நம்ப முடியாத வகையில் இருந்தது.

இதையும் படிங்க : இது தான் வாழ்க்கையோட தத்துவம்.. ஒருநாள் முன்னாதாவே பேசி வெச்சு அடிச்சோம்.. சூர்யகுமார் யாதவ் பேட்டி

அவர் களத்திற்குள் வந்து விளையாடிய விதம் என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒவ்வொரு பந்தையும் அவர் அடிக்கும் போதும் பேட் மிடிலில் பட்டு பந்து பறந்து கொண்டிருந்தது. அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இறுதியில் எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் எங்களுக்கு வெற்றியை தேடித்தந்ததில் மகிழ்ச்சி என பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement