- Advertisement -
ஐ.பி.எல்

தோணியிடம் தன் காதலை வித்தியாசமாக வெளிப்படுத்திய சாக்ஷீ தோனி..! – வைரலாகும் புகைப்படம்

தொடர்ந்து தனது கணவருக்காக ஆதரவை தரும் தோனியின் மனைவி சாக்ஷி. ஆடுகளத்திற்கு செல்லவில்லை என்றாலும் அன்பு கணவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தனது ஆதரவை தெரிவித்து தனது கனவர் மீதான அன்பை வெளிப்படுத்தியுள்ளது ரசிகர்களை சிலிர்ப்பில் ஆழ்த்தியது. நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் சென்னையின் தலையாக தோனி பல தொடர்களாக இருந்து வருகிறார். மேலும் இந்த தொடரில் சாக்ஷி பெரும்பாலான போட்டிகளுக்கு நேரில் சென்று தனது ஆதரவும் தெரிவித்து வருகிறார். மேலும் சென்னை அணியின் போட்டி எங்கு நடந்தாலும் அங்கு சென்று தனது ஆதரவை காட்டி வருகிறார்.

சென்னை அணிக்கு ஒரு புறம் தனது ஆதரவு இருந்தாலும். அவர் முக்கியமாக மைதானத்திற்கு செல்வது தனது அன்பான கணவரின் ஆட்டத்தை  காணத்தான். பெரும்பாலும் தோனியின் மனைவி இந்தியா கிரிக்கெட் ஆடும் போது கூட அவ்வப்போது மைதானத்திற்கு சென்று தனது கணவரின் ஆட்டத்தை பார்ப்பதுண்டு.ஆனால் இந்த ஐபில் சீசன் தொடங்கியதிலிருந்து அவர் சென்னை அணி விளைய்டியா ஒரு போட்டிகளை கூட தவறவிட்டதில்லை.

- Advertisement -

சென்னை அணி எந்த மைதானத்தில் இருந்தாலும் அங்கே தவறாமல் சென்று தனது ஆதரவை தெரிவித்துவருகிறார். ஆனால் நேற்று நடைபெற்ற போட்டியில் அவர் பங்குபெறவில்லை. சென்னை மாற்றும் பெங்களூரு அணிகள் மோதிய நேற்றய போட்டி புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி வாகை சூடியது. ஆனால் இந்த போட்டியை காண சாக்ஷி மைதானத்திற்கு செல்லவில்லை.

இருப்பினும் தனது கணவருக்கு தனது ஆதரவை இன்ஸ்டாகிராம் மூலமாக தெரிவித்துள்ளார். தோனி அந்த போட்டியில் களமிங்கிய சில நொடிகளில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டியில் தோனி 23 பந்துகளில் 31 ரன்களை எடுத்து  அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by