IPL 2023 : இன்னும் 2 வருசத்துல அவர் இந்தியாவுக்காக விளையாடுவாரு பாருங்க – தமிழக வீரரை பாராட்டிய பாண்டியா

Hardik-Pandya
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 4ஆம் தேதியன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 7வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி 20 ஓவர்களில் போராடி 162/8 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பிரிதிவி ஷா 7, மிட்சேல் மார்ஷ் 4, ரிலீ ரோசவ் 0 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர் 37 (32), சர்பராஸ் கான் 30 (34), அக்சர் படேல் 36 (22) என முக்கிய பேட்ஸ்மேன்களும் குறைவான ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

பந்து வீச்சில் அசத்திய குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி மற்றும் ரசித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 163 ரன்களை துரத்திய குஜராத்துக்கு ரிதிமான் சகா 14 (7), சுப்மன் கில் 14 (13), கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 (4) என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 54/3 என ஆரம்பத்திலேயே தடுமாறியது. அந்த நிலையில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய விஜய் சங்கருடன் ஜோடி சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சன் பொறுப்புடனும் நிதானமாகவும் ரன்களை குவித்து சரிவை சரி செய்தார்.

பாண்டியா பாராட்டு:
அந்த வகையில் 4வது விக்கெட் முக்கியமான 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்த இந்த ஜோடியில் விஜய் சங்கர் 29 (23) ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் அரைசதம் அடித்து அசத்திய சாய் சுதர்சன் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 62* (48) ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் வெற்றி பெற வைத்தார். அவருடன் டேவிட் மில்லர் அதிரடியாக 31* (16) ரன்கள் எடுத்ததால் 18.1 ஓவரிலேயே 163/4 ரன்கள் எடுத்த குஜராத் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்த வருடத்தில் 2 போட்டிகளில் 2வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Sai-Sudharsan

இந்த வெற்றிக்கு 62 ரன்கள் எடுத்த முக்கிய பங்காற்றிய தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார். கடந்த போட்டியில் இம்பேக்ட் வீரராக வந்து சென்னைக்கு எதிராக முக்கியமான ரன்கள் குவித்து வெற்றி பெற உதவிய அவர் இந்த போட்டியில் காயமடைந்த கேன் வில்லியம்சனுக்கு பதிலாக நேரடியாக வாய்ப்பு பெற்று மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வைத்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த வருடத்திலிருந்தே குஜராத் அணியின் வெற்றிகளில் கிடைக்கும் வாய்ப்புகளில் அசத்தி வரும் சாய் சுதர்சன் இன்னும் ஓரிரு வருடங்களில் இந்திய அணிக்காக விளையாடுவதை பார்க்க முடியும் என்று கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டியுள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு.

Pandya

“அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார். அதற்கான பாராட்டுக்கள் அவருக்கும் பயிற்சியாளர்களுக்கும் சேரும். கடந்த 15 நாட்களில் அவர் செய்து வரும் நல்ல பேட்டிங் அனைத்தும் அவருடைய கடின உழைப்பை உங்களுக்கு காட்டுகிறது. இதே போல செயல்படும் பட்சத்தில் இன்னும் 2 வருடங்களில் அவர் தன்னுடைய ஐபிஎல் அணிக்கு இன்னும் சிறப்பாக செயல்பட்டு சர்வதேச கிரிக்கெட்டிலும் இந்திய கிரிக்கெட்டுகாக முக்கிய பங்காற்றுவார் என்று கணிக்கிறேன்” என கூறினார்.

இதையும் படிங்க: IPL 2023 : இவரைபோய் நம்ம டீம்ல எடுக்காம விட்டுடீங்களே? தமிழக ரசிகர்கள் கோபம் – அப்படி என்ன நடந்தது?

அவர் கூறுவது போல தற்போது இளம் வீரராக அனுபவமின்றி இருக்கும் சாய் சுதர்சன் இன்னும் நாட்கள் செல்ல செல்ல நல்ல அனுபவத்தை கற்று தன்னைத் தானே மெருகேற்றி இந்தியாவுக்கு விளையாடுவார் என்று உறுதியாக நம்பலாம். முன்னதாக சமீப காலங்களாகவே பெயரில் மட்டும் தமிழை வைத்துக்கொண்டு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பளிக்காத சென்னை அணி நிர்வாகம் இந்த போட்டியில் குஜராத்துக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த சாய் சுதர்சன் – விஜய் சங்கர் போன்ற தமிழக வீரர்களின் திறமையை உணர வேண்டும் என தமிழக ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement