எனக்கு கிடைச்ச ஆஃபரை தோனிக்கு கொடுத்தேன்.. மற்றதெல்லாம் வரலாறா மாறிடுச்சி.. சச்சின் பகிர்ந்த பின்னணி

Sachin Tendulkar
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் கேப்டன் பதவியிலிருந்து எம்எஸ் தோனி விலகியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. கடந்த 2008 முதல் சிஎஸ்கே அணியை தலைமை தாங்கி வந்த அவர் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும், 5 ஐபிஎல் கோப்பைகளையும் வென்று காலத்தால் எளிதில் அழிக்க முடியாத வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

அதற்கு முன்பாகவே 2007ஆம் ஆண்டு அனுபவமற்ற கேப்டன்ஷிப் பொறுப்பில் தைரியமாக செயல்பட்ட அவர் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அப்படியே 2010ஆம் ஆண்டு தோனி தலைமையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முதல் முறையாக முன்னேறி சாதனை படைத்த இந்தியா சொந்த மண்ணில் நடந்த 2011 உலகக் கோப்பையை 28 வருடங்கள் கழித்து முத்தமிட்டு சரித்திரம் படைத்தது.

- Advertisement -

சச்சின் பெருமிதம்:
அதன் பின் 2013 சாம்பியன்ஸ் ட்ராபியையும் வென்ற தோனி உலகிலேயே 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்தார். இருப்பினும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு 2014இல் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை துறந்த அவர் 2017இல் மொத்தமாக இந்திய அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை விட்டது போல் தற்போது சிஎஸ்கே கேப்டன் பதவியையும் ருதுராஜ் கையில் ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில் 2007ஆம் ஆண்டு இந்தியாவின் கேப்டனாக பொறுப்பேற்குமாறு அப்போதைய பிசிசிஐ தலைவர் சரத் பவர் தம்மைக் கேட்டுக் கொண்டதாக சச்சின் கூறியுள்ளார். ஆனால் அதற்கு தோனி தான் சரியானவர் என்று தாம் பரிந்துரைத்ததாக தெரிவிக்கும் சச்சின் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு. “உண்மையில் 2007ஆம் ஆண்டு பிசிசிஐ தலைவர் சரத் பவர் இந்தியாவை என்னை தலைமை தாங்குமாறு கேட்டுக் கொண்டார்”

- Advertisement -

“ஆனால் அப்போது என்னுடைய உடல் மோசமான நிலையில் இருந்தது. குறிப்பாக கேப்டனாக கணுக்காலில் காயமும் தோள்பட்டையில் சிகிச்சையும் எடுத்துக் கொண்டிருந்த நான் நம்முடைய அணியை வழி நடத்துவது சரியல்ல என்று நினைத்தேன். அந்த சமயத்தில் தோனியை பற்றிய என்னுடைய அப்சர்வேஷன் நன்றாக இருந்தது”

இதையும் படிங்க: இதெல்லாம் தோனியிடம் கத்துக்கிட்டேன்.. 2023இல் இருந்து ஜடேஜாவும் நானும் அவுட்டாகல.. துபே பேட்டி

“ஏனெனில் நான் ஸ்லீப் பகுதியில் ஃபீல்டிங் செய்தேன். அப்போது பலமுறை அவருடன் விளையாட்டை பற்றி உரையாடினேன். அந்த நேரங்களில் நான் அவரிடம் “இது போன்ற தருணத்தில் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்” என்று கேட்பேன். அவருடைய பதில்கள் சமநிலையில் இருந்தது. அவர் மிகவும் உள்ளுணர்வு கொண்டவராகவும் அழுத்தமான தருணங்களில் விழிப்புணர்வு கொண்டவராகவும் இருந்தார்” என்று கூறினார். அந்த வகையில் அன்று சச்சின் பரிந்துரைத்ததால் கேப்டன் எம்.எஸ். தோனி எனும் வரலாற்று நாயகன் உருவானார் என்றே சொல்லலாம்.

Advertisement