176 ரன்கள் அடிச்சும் நாங்க லக்னோ அணியிடம் தோக்க இதுவே காரணம் – சி.எஸ்.கே கேப்டன் ருதுராஜ் பேட்டி

Ruturaj
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-ஆவது லீக் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்று முடிந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சிஎஸ்கே அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ரவிந்திர ஜடேஜா 57 ரன்களையும், ரஹானே 36 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 19 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி சார்பாக கே.எல் ராகுல் 82 ரன்களையும், குவிண்டன் டி காக் 54 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். இதற்கு மேல் சிறப்பாக செயல்படும்படி வீரர்களிடம் கேட்க முடியாது.

- Advertisement -

பவர் பிளேவிற்கு பிறகு நல்ல துவக்கம் கிடைத்தும் மிடில் ஓவர்களில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் பெரிய ரன் குவிப்பிற்கு செல்ல முடியவில்லை. இந்த போட்டியில் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக குவித்து விட்டோம். இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருப்பதினால் எப்போதுமே போட்டிக்கு 20 ரன்கள் வரை கூடுதலாக தேவை.

இதையும் படிங்க : 124 டெசிபல் சத்தம்.. மஞ்சள் கடலாக மாறிய லக்னோ.. ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக தோனி சரித்திர சாதனை

அந்த வகையில் இந்த மைதானத்தில் 190 ரன்கள் வரை அடித்திருந்தால் சரியான ஸ்கோராக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இருப்பினும் அடுத்த போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் அவர்களை எதிர்கொள்ள காத்திருக்கிறோம் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement