மலிங்காவால் கூட படைக்க முடியாத மிரட்டல் சாதனை படைத்த ரசல் – வேற லெவல் சாதனைகள் இதோ

Andrew Russell
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற 35-ஆவது லீக் போட்டியில் குஜராத் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் சந்தித்தன. இதில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தொடக்க வீரர் சுப்மன் கில் 7 (5) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனால் 8/1 என ஆரம்பத்திலேயே சரிந்த அந்த அணியை அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றொரு தொடக்க வீரர் ரித்திமான் சஹா உடன் இணைந்து மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

2-வது விக்கெட்டுக்கு பொறுப்பாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்த இந்த ஜோடியில் ரித்திமான் சஃகா 25 (25) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேவிட் மில்லர் அதிரடியாக 27 (20) ரன்கள் எடுத்து அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

அசத்திய குஜராத்:
ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் கடந்து 67 (49) ரன்கள் எடுத்து முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் 156/9 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரஸ்ஸல் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 157 என்ற சுலபமான இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு தொடக்க வீரர்கள் சம் பில்லிங்ஸ் 4 (4) சுனில் நரேன் 5 (5) நிதிஷ் ராணா 2 (7) கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 12 (15) என டாப் வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

இதனால் 34/4 என தடுமாறிய அந்த அணிக்கு அதிரடி காட்டிய இளம் வீரரின் ரிங்கு சிங் 4 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 35 (28) ரன்களில் அவுட்டான நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் வெங்கடேஷ் ஐயரும் 17 (17) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

- Advertisement -

போராடிய தனி ஒருவன் ரசல்:
இதனால் 98/6 என தடுமாறிய கொல்கத்தாவின் தோல்வி உறுதியான நிலையில் களமிறங்கிய அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரே ரசல் கடைசி நேரத்தில் தமக்கே உரித்தான பாணியில் பட்டாசாக சிக்சர்களை பறக்க விட்டு கொல்கத்தாவின் வெற்றிக்கு போராடினார். அவருக்கு உறுதுணையாக உமேஷ் யாதவ் 15* (15) ரன்கள் எடுக்க மறுபுறம் குஜராத்துக்கு பயத்தை காட்டிய ரசல் வெறும் 25 பந்துகளில் 1 பவுண்டரி 6 சிக்ஸர் உட்பட 48 ரன்கள் எடுத்து கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்பிற்கு அழைத்து சென்றார்.

குறிப்பாக கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் சிக்சர் அடித்த அவர் 2-வது பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானதால் கொல்கதாவின் வெற்றியும் அதோடு பறிபோனது. இறுதியில் 20 ஓவர்களில் 148/8 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா போராடி தோற்றது. இதனால் 8 போட்டிகளில் 5-வது தோல்வியை பதிவு செய்து அந்த அணி புள்ளி பட்டியலில் 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

- Advertisement -

மிரட்டலான சாதனை:
இந்த போட்டியில் கொல்கத்தா தோற்ற போதிலும் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளும் பேட்டிங்கில் 48 ரன்கள் விளாசி தனி ஒருவனாக போராடிய அன்ரே ரசல் ரசிகர்களின் பாராட்டை பெற்றார். அதிலும் 151/6 என்ற நிலையில் குஜராத் இருந்தபோது கடைசி ஓவரை முதல் முறையாக வீசிய அவர் முதல் 2 பந்துகளில் அபிநவ் மனோகர் 2 (4) லாக்கி பெர்குசன் 0 (1) என அடுத்தடுத்து அவுட் செய்து அடுத்த 2 பந்துகளில் ஒரு சிங்கிள் ஒரு பவுண்டரி கொடுத்தார். ஆனால் கடைசி 2 பந்துகளில் ராகுல் தீவாடியா 17 (12) யாஷ் தயாள் 0 (1) என மீண்டும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்த அவர் வெறும் 5 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்து குஜராத்தை கடைசி நேரத்தில் கட்டுப்படுத்தினார்.

1. அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற புதிய சரித்திர சாதனையை ஆண்ட்ரே ரசல் படைத்தார். இதற்கு முன் லசித் மலிங்கா போன்ற எந்த ஃபாஸ்ட் பவுலரும் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை எடுத்ததில்லை.

- Advertisement -

2. அத்துடன் ஐபிஎல் போட்டிகளில் ஒரே ஓவரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர் என்ற சாதனையையும் பகிர்ந்து கொண்டார். அந்தப் பட்டியல் இதோ:
1. அமித் மிஸ்ரா: 4 (புனேவுக்கு எதிராக, 2013)
2. யுஸ்வென்ற சஹால் : 4 (கொல்கத்தாவுக்கு எதிராக, 2022)
3. ஆண்ட்ரே ரசல் : 4 (குஜராத்க்கு எதிராக, 2022*)

3. அதேபோல் ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்த போது குறைந்த ரன்களை கொடுத்த வீரர் என்ற அபார சாதனையும் அவர் படைத்தார். அந்த பட்டியல் இதோ:
1. ஆண்ட்ரே ரசல் : 5* ரன்கள்
2. ரோஹித் சர்மா : 6 ரன்கள்
3. ட்வயன் ஸ்மித் : 8 ரன்கள்

இதையும் படிங்க : அசால்ட்டான சதங்கள், மிரட்டும் பட்லர் ! விராட் கோலி உட்பட யாரும் படைக்காத புதிய ஐபிஎல் வரலாற்று சாதனை

4. மேலும் இந்த போட்டியில் 6 சிக்சர்களையும் அடித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரே போட்டியில் 4 விக்கெட்டுகளையும் 6 சிக்சர்களையும் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை யுவராஜ் சிங்க்கு பெற்றார். கடந்த 2014-ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக யுவராஜ் சிங் 4 விக்கெட்டுகளையும் 6 சிக்ஸர்களையும் எடுத்தார்.

Advertisement